Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


தமிழில் உள்ள உறவு முறைகளும் அவற்றிற்கான விளக்கங்களும்

அரையாண்டு தேர்வு முடிந்த அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு உறக்கத்திலிருந்து எழவே மனமில்லாமல் உருண்டு புரண்டு உறங்கிக் கொண்டிருந்தான் ராமு. அம்மா கௌரி பரபரப்பாக சமையலறையில் பாத்திரங்களை உருட்டும் சத்தத்தோடு சமைத்துக் கொண்டிருந்தாள். அப்பா ஷங்கர் காலையிலேயே கடைக்குச் சென்று வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி திரும்ப வந்து கொண்டிருந்தார். ராமு படுக்கையை விட்டு இன்னும் எழாமல் இருப்பதை இதற்கு மேலும் கௌரியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவனது அறைக்குள் நுழைந்து..

கௌரி: ராமு உறங்கினது போதும். நீ படுக்கையை விட்டு எழுந்தா உனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்லப் போறேன். சொல்லட்டுமா? வேணாமா?

Manly Topics Blog

ராமு: அம்மா நீங்க சொல்லுங்க. நான் எழுந்திருக்கிறேன்.

கௌரி: உன்னோட அத்தை மாமாவும் மாமா பொண்ணு வருணவியும் இன்னைக்கு வீட்டுக்கு வரப் போறாங்க.

ராமு: ஹைய்யா! நிஜமாவா சொல்றீங்க?! மாமா வெளிநாட்டுக்குப் போயி ரெண்டு வருஷம் ஆயிடுச்சே?!

கௌரி: ஆமாம் அதனாலதான் இந்த டிசம்பர் விடுமுறையில ரெண்டு வாரம் நம்ம கூட இருக்கப் போறாங்க பாட்டி தாத்தாவும் கிளம்பி வந்துகிட்டு இருக்காங்க.

கௌதம்: (காய்கறிகளை கொண்டு வந்து மேசையில் வைத்தவாரே) கௌரி! அத்தையும் மாமாவும் வந்துட்டாங்க. ராமு என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?

கௌரி: வாங்க அம்மா! வாங்க அப்பா! நீங்களும் தம்பியும் வரீங்கன்னு சொன்ன பிறகு தான் ராமு படுக்கையை விட்டே எழுந்தான். தம்பி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான். இப்ப தான் போன் பண்ணினான். வருணவியும் நல்லா வளர்ந்திருப்பாள்னு நினைக்கிறேன். பார்க்கணும்னு ஆசையாவும் ஆர்வமாவும் இருக்கு.

தாத்தா; ஆமாம் கௌரி. லேப் டாப்ல வீடியோ மூலமா வருணவி பேசினா. தமிழ் கொஞ்சம் தடுமாறி பேசுறா. வீட்டிலேயும் ஆங்கிலத்திலேயே பேசிப் பழகியதால, தாத்தா பாட்டி என்பது கூட அவளுக்கு தடுமாறி தான் வருது.

ராமு: (தனது அறையிலிருந்து வெளியே வருகிறான் ராமு)

ஹைய்யா! பாட்டி! தாத்தா! இன்னைக்கு அத்தையும் மாமாவும் வரப் போறாங்க. உங்களுக்குத் தெரியுமா?

பாட்டி: தெரியும் ராமு. வருணவியும் கூட வரப் போறா. இத்தனை நாளா வீட்டிலேயே குட்டிப் பையன் நீ தான். உன்னை விட குட்டிப் பொண்ணு வருணவி. நீ பெரியப் பையன் ஆகப் போற.

ராமு: பாட்டி! அப்படின்னா அவ என்னை என்னன்னு கூப்பிடுவா?

பாட்டி: நீ அவளோட அத்தைப் பையன் அல்லவா? அதனால உன்னை மாமான்னு கூப்பிடுவா! சந்தோஷம் தானே உனக்கு?

ராமு: நான் மாமாவா? அது எப்படி பாட்டி? ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு மாதிரி கூப்பிடுறோம். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, மாமா, அத்தை, பெரியப்பா, பெரியம்மா, சின்னம்மா, சித்தப்பா, அண்ணா, அண்ணி இப்படி வெவ்வேறு மாதிரி அழைக்கிறோமே? நீங்க சொன்னா மட்டும் தான் எனக்கு தெரியுது. எனக்கே அவங்கள எப்படி கூப்பிடனும்னு தெரிய மாட்டேங்குது.

தாத்தா: அட ராமு கண்ணா! நீ ஒன்னும் கவலைப்படாதே! நீ சுலபமா தெரிஞ்சுக்கிற மாதிரி நான் உனக்கு சொல்லித் தரேன்.

உன்னோட அம்மா கூட பொறந்த அண்ணனோ தம்பியோ உனக்கு தாய் மாமா ஆவாங்க. அவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க உனக்கு அத்தை. அத்தைக்கும் மாமாவுக்கும் பிறந்த பொண்ணு உனக்கு கல்யாணம் பண்ணிக்கிற முறை. இதுவரைக்கும் புரிஞ்சிருக்கா?

ராமு: புரியுது தாத்தா! ஆனா அவள எனக்கு கல்யாணம் எல்லாம் பண்ணி வைக்காதீங்க. ஐஸ்கிரீம் கேட்டுக்கிட்டு அழுதுகிட்டே இருப்பா.

பாட்டி: ஆசையப் பாரு! கல்யாணமெல்லாம் இப்ப இல்லை ராமு. அதெல்லாம் நீங்க பெரியவங்களா வளர்ந்த பிறகு தான். அதுவும் சொந்த பந்தத்துல இப்பல்லாம் யாரும் கல்யாணம் பண்றதில்ல. பழைய கால முறை அப்படி இருந்தது! தாத்தா அதைத் தான் சொல்லிக்கிட்டு இருக்கிறார்.

தாத்தா: அதே முறைப்படி சொன்னால்தான் புரியும். தாய்மாமா வீட்டில் பெண் எடுத்து பெண் கொடுப்பது என்பார்கள். அதாவது உனக்கு ஒரு தங்கச்சி இருக்கான்னு வச்சுக்கோ! வருணவிக்கு ஒரு அண்ணா இருக்கான்னு வச்சுக்கோ!

உன்னோட மாமா வருணவிய உனக்கு கல்யாணம் பண்ணி வச்சா, உன்னோட தங்கச்சியை வருணவியோட அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க.

வருணவியோட அப்பா, உன்னோட அம்மாவின் உடன் பிறந்தவர் அப்படிங்கறதுனால, உன்னோட அம்மா அப்பாவா இருக்கிறவங்க அவளுக்கு அத்தை மாமா ஆவாங்க.

இந்த காலத்துல எல்லாம் இப்படி நெருங்கிய உறவுகளை திருமணம் செய்து கொள்வதில்லை. அந்த காலத்துல சொத்து பத்து வெளிய போயிடக் கூடாது சொந்த பந்தம் விட்டுப் போய்ட கூடாது என்பதற்காகவும், பிள்ளைங்க நம்ம குடும்பத்திலேயே பாதுகாப்பா இருப்பாங்க அப்படிங்கறதுக்காகவும் உருவாக்கின உறவு.

உடன்பிறந்த தங்கை, அவள் திருமணமான வீட்டில் குழந்தைகளோட நல்லா வாழ்கிறாளா அப்படிங்கறதுல அண்ணனுக்கு முக்கியமான பொறுப்பு இருக்கு. தன் தங்கை பிள்ளைகளுக்கு அவன் தான் தாய் மாமன். முக்கியமான உறவு இவர்தான்.

ராமு: சரிங்க தாத்தா, அப்படின்னா இப்ப எல்லாம் வெளியுறவுகள்ள திருமணம் செய்றதா பாட்டி சொன்னாங்க. அப்போ அவங்கள எப்படி கூப்பிடுறது?

பாட்டி: அதேதான் ராமு! எந்தப் பெண்ணை நீ திருமணம் பண்ணுவியோ அவங்களோட அம்மா அப்பா உனக்கு  மாமன் அத்தை என வச்சுக்கலாம்.

அதே மாதிரி அந்தப் பொண்ணுக்கும் உன்னுடைய அம்மா அப்பாவும், அத்தை மாமன் என்ற உறவாக வச்சுக்கலாம்.

பெண் கொடுத்து பெண் எடுக்கும் முறை என இருக்கிறது அல்லவா? நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு கூட பிறந்த அண்ணனுக்கு உன்னுடைய தங்கச்சியை கல்யாணம் பண்ற முறை.

உன்னுடைய அத்தை மாமாவா இருக்கிறவங்க, உனது தங்கச்சிக்கும் அத்தை மாமா தானே? அத்தையோட பையனை அவ கல்யாணம் பண்ணிக்கலாம்.

உன் மனைவி கூட பிறந்தவங்க உனக்கு மச்சான். அதே சமயத்துல உன் தங்கச்சியையோ அக்காவையோ கல்யாணம் பண்றவங்க பெரியவங்களா இருந்தா உனக்கு மாமா. இதுதான் மாமன் மச்சான் உறவு.

உன் மனைவி கூட அக்காவோ தங்கச்சியோ இருந்தா அவங்கள கல்யாணம் பண்ணிக்கிறவங்க உனக்கு சகலை ஆவாங்க.. அதே நேரத்தில் உன் மனைவிக்கு அவளுடைய தங்கச்சி கணவர் அத்திம்பேர் ஆவாங்க.

ஒரே வீட்டில் பிறந்த அண்ணன் தம்பி அவர்களின் மனைவிகளை ஓர் அகத்தி என்பார்கள். அதாவது ஓரகத்தி, ஒப்புடையவர்கள், ஒரே வீட்டில் திருமணம் செய்து கொண்டவர்கள் என அர்த்தம்.

ஒரு பெண்ணிற்கு அவளது கணவனுடன் பிறந்தவர் மூத்தவர் என்றால் மச்சாண்டார் எனவும், இளையவர் என்றால் கொழுந்தனார் எனவும் சொல்வாங்க.

ஒரு பெண் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்லும் பொழுது கணவனுடன் பிறந்த தங்கையை நாத்தனார் அப்படின்னு சொல்லுவாங்க.

தன்னுடைய அண்ணனை கல்யாணம் பண்ணிக்கொண்ட பெண் அண்ணி ஆவாள். அந்த அண்ணிக்கு தன்னோட அண்ணனைப் பற்றி விளக்கங்களை கொடுக்கிறது இந்த நாத்தனார் தான். ஏன்னா, கூடவே பிறந்து வளர்ந்தவளுக்குத்தானே அண்ணனைப் பற்றி முழுமையாகத் தெரியும்?. இதைத்தான் நாத்தனார் விளக்கம் அப்படின்னு சொல்வது மருவி, நாத்தி விளக்கு என மாறிப் போச்சு. அண்ணனோட கல்யாணத்தப்ப தங்கச்சிய தேவையே இல்லாம விளக்கு புடிச்சுகிட்டு நிக்க சொல்றாங்க.

சரி அது இருக்கட்டும். இதுவரைக்கும் சொன்ன உறவுகளை அடிப்படையா வச்சு, ஒருவர் தனக்கு அண்ணன் முறை வந்தால் அவரை சூழ்ந்து இருக்கும் உறவு நமக்கு என்ன வேண்டும் என யூகம் பண்ணிக்கலாம்.

மாமா முறை வந்தாலும் தந்தை முறை வந்தாலும் அவர்களை வைத்து அவர்களை சூழ்ந்த உறவு என்னவாக இருக்கும் என நாம தீர்மானிக்க முடியும்.

ராமு: தாத்தா இவ்வளவு உறவு முறைகளைப் பத்தி சொன்னீங்க! இதுல பெரியப்பா பெரியம்மா, சித்தப்பா சின்னம்மா (சித்தி) என யாருமே வரலையே?!

பாட்டி: சமத்துக் குட்டி ராமு! இவ்வளவு நேரம் நீ கவனமாக தான் கேட்டுக்கிட்டு வந்திருக்க. அதெல்லாம் உனக்கு ஏற்கனவே தெரியும் தானே?! இருந்தாலும் அந்த உறவுகளை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்? நான் சொல்றேன்.. வெளிநாட்டுல வளருகிற வருணவிக்கு உறவுமுறைகள் பற்றி தெரியாமல் கூட இருக்கலாம். அவள் வந்த பிறகு அவளுக்கு நீ விளக்கம் சொல்ல முடியும். சொல்றேன், கேட்டுக்கோ பார்க்கலாம்.

அப்பா கூட பிறந்த அண்ணா உனக்கு பெரிய அப்பா. பெரியப்பா என்று சொல்றோம்.

 அவருடைய தம்பி உனக்கு சின்ன அப்பா (சிறிய அப்பா). சித்தப்பா என்று கூப்பிடறோம். அவங்களோட மனைவியை முறையே பெரியம்மா சின்னம்மா அப்படின்னு கூப்பிடுறோம்.

அவங்களோட பிள்ளைங்க உங்களுக்கு பெரியவங்களா இருந்தா அக்கா, அண்ணா, சின்னவங்களா இருந்தா தம்பி தங்கச்சி.

இது அடிப்படையா வச்சு, அப்பாவுக்கு அண்ணன் அப்படின்னு அவர் கூப்பிடுற முறையில வரவங்களோட பிள்ளைகளை, நீங்க அண்ணா, அக்கா, தம்பி, தங்கச்சி அப்படின்னு முறை வைத்து கூப்பிடலாம்.

நாங்க மட்டும் இல்லாம, உன் அப்பாவுக்கு மாமா அத்தை முறையில் இருக்கிறவங்க, உனக்கு தாத்தா பாட்டி ஆவாங்க. அதேபோல அம்மாவுக்கும் மாமா அத்தை முறையில இருக்கிறவங்க உனக்கு தாத்தா பாட்டி.

அப்புறம் உன் அம்மா கூட பிறந்த அக்காவும் தங்கையும் உனக்கு பெரியம்மா சின்னம்மா ஆவாங்க. அவங்களுடைய கணவர் முறையே பெரியப்பா சித்தப்பா ஆவாங்க.

அதேபோல அவங்க பிள்ளைங்க எல்லாம் பெரியவங்களா இருந்தா அண்ணன் அக்கா, சிறியவங்களா இருந்தா தம்பி தங்கச்சி.

இப்படி இந்த உறவு முறைகளெல்லாம் கிளை பாய்ந்து போய்க்கொண்டே தான் இருக்கும். சுற்றம் சூழ வாழ்பவர்கள் நாம்.

கௌதம்: அத்தையும் மாமாவும்  உறவு முறைகள பத்தி ரொம்ப விளக்கமா ராமு கிட்ட சொல்லி இருக்கீங்க. இத்தனை நாள் அவனுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை.

வருணவி வந்த பிறகு ஒன்னு நடக்கப் போகுது பாருங்க. இந்த முறைகள் எல்லாம் எதுவுமே இல்லாம அவள் வயதை ஒட்டி கொஞ்சம் பெரியவங்களா அல்லது சின்னவங்களாக இருக்கிற பிள்ளைகளை பேர் விட்டு கூப்பிடுவா. அவளோட அம்மா அப்பா அளவுக்கு பெரியவங்களாவோ கொஞ்சம் சின்னவங்களாவோ இருந்தா ஆன்ட்டி அங்கிள் அப்படின்னு கூப்பிடுவா. இதுதாண்டி வேற எதுக்கும் அவ போக மாட்டா.

மிஞ்சி போனா நீங்க கிராண்ட் பா, கிரான்மா அவ்வளவுதான்.

சற்று நேரத்திற்கெல்லாம் ராமுவின் அத்தை மாமா வருணவியோடு உள்ளே நுழைந்தார்கள். ஆனால் கௌதம் சொன்னது போல வருணவி அப்படித்தான் எல்லோரையும் அழைத்தாள்.

உறவின் முறைஉறவின் பெயர்
1அப்பாவின் அப்பா/ அம்மாவின் அப்பாதாத்தா
2அப்பாவின் அம்மா/ அம்மாவின் அம்மாபாட்டி
3அப்பாவின் அண்ணன்/ அண்ணன் மனைவிபெரியப்பா/பெரியம்மா
4அப்பாவின் தம்பி/ தம்பி மனைவிசித்தப்பா/சின்னம்மா
5அப்பாவின் அக்கா, தங்கை/ அவர்களது கணவர்அத்தை/மாமா
6அம்மாவின் அக்கா/அக்காவின் கணவர்பெரியம்மா/பெரியப்பா
7அம்மாவின் தங்கை/தங்கையின் கணவர்சின்னம்மா/சித்தப்பா
8அம்மாவின் அண்ணா,தம்பி/ அவர்களது மனைவிமாமா/அத்தை (அ) (தாய் மாமன்/அத்தை)
9அண்ணன் மனைவிஅண்ணி
10தம்பியின் மனைவிநங்கை, கொழுந்தியாள்
11தன் மனைவியின் அக்காமைத்துனி
12தன் மனைவியின் தங்கை கொழுந்தியாள்கொழுந்தியாள்
13தன் மனைவியின் அண்ணன்மாமா
14தன் மனைவியின் தம்பிமச்சான்
15தன் பெரியப்பா பெரியம்மாவின் பிள்ளைகள்அவர்களது வயதைப் பொறுத்து அண்ணன், அக்கா தம்பி,, தங்கை
16தன் சித்தப்பா சின்னம்மாவின் பிள்ளைகள்அவர்களது வயதைப் பொறுத்து அண்ணன், அக்கா தம்பி, தங்கை
17
18
அக்காவின் கணவர் தங்கையின் கணவர்மாமா வயதில் பெரியவர் எனில் மாமா; சிறியவர் எனில் மச்சான்
19
20
தன் கணவரின் அண்ணன்/அண்ணனது மனைவி தன் கணவரின் தம்பி/தம்பியின் மனைவி அண்ணனுக்கு தம்பியின் மனைவி மச்சாண்டார்/அக்கா ( ஓர் அகத்தி-ஒப்புடையவள்) கொழுந்தனார் /தங்கை (ஓர் அகத்தி-ஒப்புடையவள்) தம்பி பெண்டிர்
21தாத்தா பாட்டியின் அம்மா/ அப்பாகொள்ளு தாத்தா/ கொள்ளு பாட்டி

தமிழில் உள்ள உறவு முறைகளுக்கான ஒத்த சொற்களை முதலில் பார்க்கலாம். அவற்றை அறிந்து கொள்வதன் மூலம் இந்த உறவை இப்படியும் அழைக்கலாமா என்பது தெரிந்து கொள்ளலாம்.

தந்தை, அப்பன், தமப்பன், தகப்பன், அத்தன், அச்சன், ஆஞான், ஆஞி, இஅயன், தா, நாயன்

தாய், அம்மை, அவ்வை, அன்னை, அஞ்ஞை, அத்தி, ஆத்தி, ஆத்தை, அச்சி, ஆச்சி, ஐயை, ஆய், தள்ளை

மகன், புதல்வன்

மகள், புதல்வி

பொதுவானதாக, மகவு, பிள்ளை, சேய், மதலை, கான்முளை, மக்கள்

அண்ணன், தமையன், ஆயான், அண்ணாட்சி, அண்ணாத்தை, தம்முன், மூத்தோன், முன்னோன்

தம்பி, தம்பின், இளவல், இளையான், பின்னோன்

அக்கை, அக்கைச்சி, தமக்கை, மூத்தாள், அச்சி

தங்கை, தங்கை அச்சி, செள்ளை, இளையாள், பின்னை, பின்னி

அண்ணன் மனைவி, அண்ணி, ஆயந்தி, நங்கை, அத்தாச்சி

அக்கை கணவன், அத்தான், மச்சான், மாமன்

மருமகன், மருமான், மருகன், மணவாளன்

மருமகள், மருமாள், மருகி, மணாட்டுப் பெண்

பெண் கொடுத்தோன், மாமன், மாமி

கணவன், அகமுடையான், கண்ணாளன், கொழுநன், கொண்கன், கொண்டான், நாயகன், மணவாளன், மணாளன், வீட்டுக்காரன்

மனைவி, அகமுடையாள், இல்லாள், மனையாள், பெண்டு, பெண்டாட்டி, கண்ணாட்டி, மணவாட்டி, வீட்டுக்காரி (டமகெர்?!)

கணவனின் தம்பி - கொழுந்தன்

கணவனுடைய அண்ணன் - அத்தான், மூத்தார்

கணவனுடைய தங்கை - கொழுந்தி

கணவனுடைய அக்கை - நாத்தூண், நாத்துணாள்

மனைவியின் அண்ணன் - மூத்த அளியன், அத்தான்

மனைவியின் தம்பி- இளைய அளியன்

மனைவியின் அக்கை - மூத்தளியாள், கொழுந்தி

மனைவியின் தங்கை (மொச்ட் நன்டெட்?!) - இளையளியாள், கொழுந்தி

ஓரகத்தான் - ஓர் குடி மணாளன், ஓர் குடியோன் (சகலன்)

ஓரகத்தி - ஓர்ப்படி, ஓர்ப்படைச்சி (ஒரே வீட்டில் புகுந்தவர்கள்)

தந்தையண்ணன், பெரியப்பா, மூத்தப்பா, பெரியையா

தந்தை தம்பி - சின்னப்பன், சிறிய தகப்பன், குட்டப்பன், சின்னையா

தந்தை சகோதரி, அத்தை, சின்னத்தை, பெரியத்தை

தாயின் சகோதரன், பெரியம்மான், சின்னம்மான், அம்மாண்டார், அம்மான் (மாமன் அல்ல)

தாயின் அக்கை, பெரியம்மை, பெரிய தாய், பெரியம்மா

தாயின் தங்கை, சின்னம்மா, தொத்தா, சித்தி, பின்னி

தந்தையின் தந்தை, அப்பச்சன், தாதா, தாதை, தத்தா, அப்பார்

தந்தையின் அதாய் - அப்பாச்சி, அப்பாத்தை, அப்பத்தி, அப்பாய்

தாயின் தந்தை, அம்மாச்சன்

தாயின் தாய், அம்மாச்சி, அம்மாய், அமிஞை, அம்மத்தா

பெற்றோர் தந்தை, பாட்டன், போற்றி, போத்தி

பெற்றோர் தாய் - பாட்டி

பாட்டன் தந்தை - பூட்டன், அப்பாட்டன், கொள்ளுப்பாட்டன்

பாட்டன் தாய் - பூட்டி, கொள்ளுப் பாட்டி

பூட்டன் தந்தை - ஓட்டன், சீயான், சேயான்

பூட்டன் தாய் - ஓட்டி, சீயாள் (சேயாள்)

மச்சினன்/மச்சம்பி/மச்சான்: தங்கை கணவன், அம்மான் மகன், அத்தை மகன், 

இல்லாளின் சகோதரன், வயதில் இளையவன்/மூத்தவன்: மச்சான்

மச்சினி: இல்லாளின் தங்கை, அம்மான் மகள், அத்தை மகள் (வயதில் இளையவள், மூத்தவள் மச்சாள்)

மச்சாண்டார்: கணவனின் மூத்த சகோதரன் 

மகன் மகன், மகள் மகன் - பெயரன், பேரன்

மகன் மகள், மகள் மகள் - பெயர்த்தி, பேத்தி

பேரன் மகன் - கொள்ளுப் பேரன், பொட்பேரன்

பேரன் மகள் - கொள்ளுப் பேர்த்தி, கொட்பேர்த்தி

சக நிலையில் களம் புகுந்தவள், சககளத்தி, சக்களத்தி, ஒக்களத்தி

Cousin என்பது போல பொதுச் சொல், அண்ணாழ்வி, மூத்தாழ்வி, இளச்சனாழ்வி

Cousin-In-Law? மருஆழ்வி

மேல கொடுத்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு அளித்துச் சென்ற மொழிஞாயிறு பாவாணர் ஐயா அவர்களுக்கும், போப் அடிகளாருக்கும் நம்ம நன்றிகளைச் சொல்லிட்டு, cousin in lawகுறித்த தகவலுக்கு போலாம் வாங்க.

Husband of one's cousin: ஒருத்தருடைய ஆழ்வியோட கணவன். உதாரணத்துக்கு சொல்லப் போனா, பெரியப்பா மகள், வயசுல மூத்தவர்ங்றதால அவர் மூத்தாழ்வி. அவரோட கணவர் மூத்த மருஆழ்வி, மூத்த மராழ்வி.

Wife of one's cousin: மேல சொன்னதோட பெண்பால், மருக்கையாழ்வி

Cousin of one's husband: மூத்த மராழ்வி, இளைய மராழ்வி

Cousin of one's wife: மரு தங்கையாழ்வி, மருதங்காழ்வி

Husband of the cousin of one's husband: உதாரணத்துக்கு, என் மனைவியின் பெரியப்பா மகளோட கணவன், என்னோட மனைவிக்கு மருஅண்ணாழ்வி, வயசுல மூத்தவரா இருக்கும்பட்சத்தில்

Husband of the cousin of one's wife: உதாரணத்துக்கு சொல்லப் போனா, என்னோட damagerக்கு, ச்சீ, என்னோட இல்லாளுடைய இளையாழ்வியின் கணவர் எனக்கு மரு இளையாழ்வி.

Wife of the cousin of one's husband; கணவரோட அக்கையாழ்வி அல்லது தங்காழ்வியின் கணவர், மரு அக்காழ்வி அல்லது மரு தங்காழ்வி.

Wife of the cousin of one's wife: மனைவியின் அண்ணாழ்வி, அல்லது இளையாழ்வியின் மனைவி, மரு அண்ணாழ்வி அல்லது மரு பின்னாழ்வி.

இந்த ஏழு தலைமுறை, ஏழு தலைமுறைன்னு சொல்லுறாங்களே? அது?? சேயோன்(ஓட்டன்), பூட்டன், பாட்டன், தந்தை, தான், மகன், பெயரன், கொள்ளுப் பெயரன், எள்ளுப் பெயரன் ஆகிய இதுகள்ல, முதலும் கடையும் போக மிஞ்சியதைச் சொல்றதுதாங்க அது.

Comments

Popular posts from this blog

பெண்கள் கர்ப்பமாவதை தடுக்கும் மாத்திரைகள்

திருமணமாகும் முன்னரே காதலித்தவளுடன் உடலுறவு கொள்வது அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சார்ந்தது. இரண்டு மனம் ஒத்துப் போன பிறகு ஓத்துக் கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படாமல் அவள் அவனுக்கு தன் புண்டையை விரிக்கமாட்டாள். ஆனால் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல, ஆசை காட்டி மோசம் பண்ணும் ஆண்களுக்கு சமூகத்தில் பஞ்சமா என்ன?

ஆபிரிக்க ஆண்களுக்கு பொதுவாகவே ஆண்குறி பெரிதாக இருக்குமா?

ஆசிய ஆண்களை விட ஆபிரிக்க ஆண்களுக்கு ஆண்குறிகள் பெரிதாக இருக்குமா? ஆண்குறியின் அளவுக்கும் இனத்திற்கும்(Race/Ethnicity) ஏதாவது சம்பந்தம் உள்ளதா? இல்லை என்கிறது விஞ்ஞானம். ஆமாங்க, ஆபிரிக்க ஆண்களுக்குத்தான் ஆண்குறி பெரிதாக இருக்கும் என்பது நமது சமூகத்தில் அறியாமையினால் விதைக்கப்பட்ட மூட நம்பிக்கைகளில் ஒன்றாகும். நம்மூரிலேயே பெரிய ஆண்குறியை உடைய ஆண்கள் இருக்கிறார்கள். ஆபிரிக்க ஆண்களில் கூட சிறிய ஆண்குறி உடையவகள் இருக்கிறார்கள். இந்த மூட நம்பிக்கை பரவலாக நம்பப்பட்டமைக்குக் காரணம் ஆபாசப் படங்கள் ஆகும். அவற்றில் நடிக்கும் ஆபிரிக்க, கறுப்பின ஆண்களுக்கு ஆண்குறி சாதாரண அளவை விட பெரிதாகவே இருக்கும். அப்படியிருப்பதால் எல்லா ஆபிரிக்க ஆண்களுக்கும் ஆண்குறி பெரிதாகவே இருக்கும் என்ற மூட நம்பிக்கை வலுப்பெற்று விட்டது. ஆனால் உண்மையில் எல்லா இன ஆண்களிடமும் பெரிய ஆண்குறியை உடைய ஆண்களும் உள்ளனர், சிறிய ஆண்குறியை உடைய ஆண்களும் உள்ளனர். ஒரு ஆணின் இனத்திற்கும், அவனது சாதிக்கும் அவனின் ஆண்குறியின் அளவுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. ஆண்குறியின் அளவு என்பது ஒரு ஆணின் குடும்ப சொத்து. இருப்பினும் நீங்க பார்க்கிற...

லுங்கிக்கு கொடுக்கப்பட்ட சாதிய அடையாளம்

பொதுவாகவே மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் அவை சார்ந்து ஆண்ட சாதியினருக்கும் அடக்கி ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் வெவ்வேறான கருத்துக்கள், முரண்பாடுகள் இருக்கும். பெரியேறும் பெருமாள், கர்ணன் வரிசையில் திரைக்கு வர இருக்கும் மாரி செல்வராஜின் இன்னொரு படம் தான் Bison(காட்டெருமை). அந்தப் படத்தின் First Look, Trailers, மற்றும் பாடல்கள் தற்சமயம் இணையத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இப்போ அதில ஏதாவது பிரச்சனை கிளம்பியிருக்கா என்றால் அது தான் இல்லை. பைசன் படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் பைசன் திரைப்படத்தில் துருவ் விக்கிரம் அணிந்திருந்த லுங்கி தான் தற்சமயம் பேசுபொருளாகி உள்ளது. துருவ் என செல்லமாக அழைக்கப்படும் Dhruv Vikram அவர்கள் Bison(2025) திரைப்படம் சார்ந்த நேர்காணலில் கர்ணன் படத்தில் நடிகர் தனுஷ் அணிந்த அதே லுங்கியை பைசன் படத்தில் சில காட்சிகளின் போது தானும் அணிந்ததாக கூறியிருந்தார். தனுஷ் அணிந்த லுங்கியை துருவ் அணிந்தது தான் பிரச்சனையா? அதுவும் இல்லை. ஒரே லுங்கி என்பது போல் தான் அவர் சொல்லியிருப்பார். அதே லுங்கி என்று சொல்லியிருக்க மாட்டார்.

முழுசா மூடியிருந்தாலும் மூடாக்கும் ஆண்கள்

ஆண்கள் வயசுக்கு வந்த நாள் முதல் செய்யும் முதல் விடையம் தான் தமது உடலில் இருக்கும் அம்சமான விடையங்கள் Highlight ஆகி வெளித்தெரியும் வகையில் ஆடைகளை அணிவதாகும். ஆனால் அதற்காக எல்லாத்தையும் தூக்கி காட்ட வேண்டும் என்றில்லை. ஆண்களின் தொடைகள், ஜட்டி பொட்டலம்(Underwear Bulge), குண்டிகள், மேற்கை(Biceps), மார்பு, இடுப்பு போன்றவற்றின் Outline/Shape வெளித்தெரியும் வகையில் உடலுடன் ஒட்டியது போன்ற ஆடைகளை நேர்த்தியாக அணிந்தாலே போதும். பார்க்கிறவங்க பார்வையெல்லாம் உங்கள் மேலேதான் இருக்கும்.

உங்களுக்கு பெரிய சைஸ் ஜட்டி போடும் பழக்கம் இருக்கா?

உங்களுக்கு உங்க சைஸை விட பெரிய சைஸ் ஜட்டி போடும் பழக்கம் இருக்கா? அதுக்கு நீங்க ஜட்டி போடாமலேயே இருக்கலாம். ஆண்கள் ஜட்டி போடுவேதே அவை அவர்களின் அந்தரங்கப் பகுதியை தேவையான அளவுக்கு தாங்கிப் பிடித்து Support கொடுப்பதற்கு ஆகும். ஆனால் எல்லா ஆண்களுக்கும் அவர்களின் இடுப்பு அளவுக்கு மாத்திரம் ஜட்டியை வாங்கி அணியும் போது ஜட்டி Size பத்தாது போகலாம்.  Waist Size க்கு ஏற்ற Underwear Size யை தெரிவு செய்து அணிந்தால் கூட அது அதிகம் இறுக்கமாக, தளர்வாக இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.