உங்கள் கணவருக்கு தனக்கு ஆண்கள் மேல் தான் நாட்டம் உள்ளது, தான் ஒரு ஓரின விரும்பி, ஓரினச்சேர்க்கையாளன், தன்னினச்சேர்க்கையாளன் என்று தெரிந்திருந்தால் அவர் உங்களை திருமணம் செய்து கொண்டிருக்கவே கூடாது. அது அவர் உங்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும். அதை விட மிகப்பெரிய துரோகம் அவர் உங்க கூட உடலுறவு வைத்துக் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது ஆகும். இதற்காக நீங்கள் தற்கொலை செய்வதோ, அல்லது வேறு ஏதாவது தவறான முடிவு எடுப்பது சிறந்த தீர்வாக இருக்காது.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் உங்கள் கணவரை விவாகரத்து செய்து விட்டு, ஒரு Straight ஆண்யை திருமணம் செய்து கொள்ளுங்கள்.
திருமணத்திற்கு பிறகு கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் ஆண்களை திருத்துவது போல, பல பெண்களுடன் படுக்கும் ஆண்களைப் போல, குடிப்பழக்கம் உள்ள ஆண்களை திருத்துவது போல அவரை கொஞ்சம் கொஞ்சமாக வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்று தயவு செய்து நம்பிக்கை வைக்க வேண்டாம்.
ஏனென்றால் இடது கை பழக்கம் போன்று இதுவும் இயற்கையாகவே அமைவது. அவர்களை எல்லாம் வலுக்கட்டாயமாக நமது பக்கம் இழுக்க முடியாது. தலையில் அடித்து சத்தியம் பண்ணிய மறுகணமே இன்னொரு கவர்ச்சியான ஆண்யைப் பார்த்தால், உங்கள் மீது பண்ணிய சத்தியத்தை மறந்து அவர்கள் பின்னால் போய் விடுவார்கள். விபச்சாரிகள் போல கண்ட கண்ட ஆண்களுடன் படுத்து விட்டு வந்து உங்களுடனும் படுப்பார்கள். அதனால் உங்களுக்கு பால்வினை நோய் தொற்று கூட ஏற்படலாம்.
ஒரு ஆண் Gay யாக இருப்பது, ஒரு பெண் Lesbian ஆக இருப்பது நோயோ, குறைபாடோ அல்ல. இதற்கு மருத்துவமோ சிகிச்சையோ கிடையாது. பெரியவர்களை கொண்டு அறிவுரை கூறச் செய்வதோ, பஞ்சாயத்து வைப்பதோ, எந்த முறையிலும் அவரை உங்களிடம் குடும்பம் நடத்த செய்ய முடியாது.
ஒருவேளை அவர் பைசெக்ஸுவல்(Bisexual) ஆக இருந்து (அதாவது ஆண், பெண் இருவர் மேலும் ஈர்ப்பு உடையவர்) உங்களுடன் உறவு வைத்துக் கொண்டாலும் அதில் உங்களுக்கோ அவருக்கோ முழுமையான திருப்தி இருக்காது. உங்கள் இருவருக்கும் இடையே உண்மையான காதல் இருந்தால் ஏதாவது முயற்சிக்கலாம்.
சட்டப்படியாக விவாகரத்து பெற்று உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழத் தொடங்குவது சரியான தீர்வு. நாட்டில் திருமணம் செய்து கொள்ள தகுதி இருந்தும் பெண் கிடைக்காத நிறைய பேர் இருக்கின்றனர். தனக்கு ஒரு வாழ்க்கை அமையுமா? என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களும், திருமணம் ஆகி துணையை இழந்து தனது குழந்தைக்கு ஒரு நல்ல அம்மா கிடைப்பாளா என்றும் ஏங்கி கொண்டிருக்கும் தந்தைகளும் நிறைய இருக்கின்றனர்.
அவர்களில் ஒருவரை கண்டறிந்து பேசி பழகி, அவர் உங்களையும் உங்கள் குழந்தைகளையும்(குழந்தைகள் இருந்தால்) மனதார ஏற்றுக்கொள்வாரா என்று கண்டறிந்து குடும்பத்தினர் சம்மதத்துடன் முறைப்படி மறுமணம் செய்து கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்து இதை விட சரியான தீர்வு உங்கள் பிரச்சனைக்கு இல்லை.
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பதற்காக Gay ஆனாலும் கணவன் என்று வாழ்ந்து விட முடியாது. திருமணம் செய்து கொள்வதே உடல் பசியை தீர்த்துக் கொள்ளத்தான். நம்மை கல் மாதிரி நினைத்து நமது உணர்ச்சிகளை மதிக்காத ஒருவருடன் வாழ முடியாது என்பதை உணர்ந்து தான், சட்டமே இந்த காரணத்தை கூறினால் உடனடியாக விவாகரத்து தருகிறது.
நம்மைச் சுற்றி இருப்பவர்கள் ஏதாவது சொல்வார்களே என்று யோசிக்க வேண்டாம். அவரவர்களுக்கு அவரவர் வாழ்க்கை பற்றி தான் கவலை. நாம் அழுதாலும் நம்முடன் சேர்ந்து அழுவதற்கு யாரும் வரப்போவதில்லை. எதுவாக இருந்தாலும் பொம்பள தான் பொறுத்து போகணும் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்கள். இல்லையென்றால் குழந்தைகளுக்காக பாருமா என்று முடித்து விடுவார்கள். குழந்தைகளின் எதிர்காலம் பாழாகுமே என்று யோசிக்க வேண்டாம்.
இந்த மாதிரி ஆட்களுக்கு குழந்தைகளிடமும் பாசம் இருக்காது, இல்லை என்றாலும் இவரிடம் தொடர்ந்து வாழும் போது தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளாகி, அதனுடைய விளைவு உங்கள் குழந்தைகள் மேல் தான் விழும். அதைவிடவும் வேறு ஒரு நல்ல மனிதர் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாக இருப்பார் என்று நம்புங்கள்.
Read More: ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் எப்படி பெண்களை திருமணம் செய்து சாதாரண வாழ்க்கை வாழ்வது?


Comments
Post a Comment