மிகவும் மிருதுவான ஆடைகள், மற்றும் உள்ளாடைகள் உற்பத்திக்கான துணி என்றால் அது பருத்தி துணி தான் என்ற காலம் மலையேறி விட்டது. இப்போது பருத்தி போல மூங்கில்(Bamboo), Birch, Oak, Beech போன்ற மரங்களின் கூழில்(Made from the pulp of Trees) இருந்தும் செயற்கை பட்டு இழைகள் தயாரித்து துணிகளை உருவாக்குகின்றனர்.
ஆரம்பத்தில் 100% பருத்தியை பயன்படுத்தி மாத்திரம் ஆண்களுக்கான ஜட்டியை உருவாக்கினார்கள். செயற்கை நார்களை(Synthetic Fabrics) பயன்படுத்தியும் ஆண்களுக்கான ஜட்டிகளை உருவாக்கினார்கள். பின்னர் அவற்றை அணியும் போது எதிர்கொள்ளும் குறைபாடுகளை நிவர்த்த்தி செய்ய அவற்றுடன் பருத்தியை கலந்தும்(Cotton Blend) ஜட்டிகளை உருவாக்கினர். அதன் அடுத்த பரிணாமகாக மொடால் ஜட்டிகள் சந்தைக்கு வர தொடங்கியுள்ளன.
மொடால் (Modal) துணி என்பது பீச் (Beech) மரக்கூழிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையான செயற்கை பட்டு (Regenerated Cellulose) இழைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் துணியாகும். இது பருத்தியை விட மிகவும்(3 மடங்கு) மென்மையானது, எடை குறைந்தது, அதிக உறிஞ்சும் தன்மை கொண்டது மற்றும் எளிதில் சுருக்கமடையாதது. இது ஆடம்பரமான பளபளப்புடன், நீண்ட கால உழைப்பிற்கு(Long Lasting) உகந்தது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த தாவர அடிப்படையிலான இழைகளால் ஆனவை அதனால் இதனை Semi-Synthetic துணிகள் என்பர். இது உடலுக்கு குளிர்ச்சியையும் சுகத்தையும் அளிக்கக் கூடியவை.
மொடால் துணிகள் மிகவும் மென்மையானது, மற்றும் சருமத்தில் பட்டுப் போல உணர்வை அளிக்கக்கூடியது. காற்று ஊடுருவக்கூடியது, உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. வியர்வையை விரைவாக உறிஞ்சி, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது. அடிக்கடி துவைத்தாலும், இந்த துணி சுருங்குவதையோ அல்லது அதன் வடிவத்தை இழப்பதையோ எதிர்க்கிறது. மீள் தன்மையுடன்(Stretchable) இருப்பதால், உடலுக்குக் கட்டுக்கோப்பான மற்றும் வசதியான பிடிமானத்தை வழங்குகிறது.
திருப்பூர் போன்ற இடங்களில் இத்தகைய உயர்தர உள்ளாடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. Jockey, XYXX, போன்ற பல பிராண்டுகள் இந்த வகை உள்ளாடைகளை வழங்குகின்றன.
அணிவதற்கு சுகமான மொடால் (Modal) ரக ஆடைகளின் தனித்துவம் என்ன?
நாம் அணியும் ஆடைகள் பார்ப்பதற்கு அழகாகவும், நமக்குப் பிடித்த மாதிரியும், பிறர் மனத்தைக் கவரும்படியும் இருப்பது முக்கியமல்ல. அவை அணிவதற்கு சவுகரியமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம். சில உடைகள் விலை உயர்ந்ததாக இருந்தாலும், அணிந்து கொள்ள வசதில்லாமல் இருந்தால் அத்தகைய உடைகளால் பயன் இல்லை. ஆனால் மொடால் ரக துணிகள் அணிவதற்கு மிகவும் சுகமாகவும், சவுகரியமாகவும் இருக்கும். அவற்றின் சில முக்கிய நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. மொடால் துணிகள் பீச் மரங்களின் செல்லுலோஸிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை அணிந்து கொள்வதற்கு மிகவும் மென்மையானவை. இது நாள் முழுவதும் அணிவதற்கு வசதியாக இருக்கும்.
2. இது அணிபவரை எப்போதும் குளிர்ச்சியாகவும், சூடான காலநிலையில் கூட வியர்க்காத வண்ணம் வசதியாகவும் வைத்திருக்கும்.
3. அதிகமான வெயில் நேரத்தில் கூட மொடால் துணிகள் ஈரப்பதத்தை விரைவாக உறிஞ்சி வெளியிடும். எனவே அணிபவரை உலர்வாக வைத்திருக்கும். சிறிது கூட கசகசப்பின்றி இருக்கும்.
4. இது மென்மையாக இருந்தபோதிலும், நீடித்து உழைக்கும். இதன் கட்டமைப்பு சுருங்கிப் போவதில்லை. நிறமும் சீக்கிரத்தில் மங்காது.
5. இது முக்கியமாக சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பீச் மரங்களிலிருந்து தயாரிக்கப்படுவதால் மக்கும் தன்மை கொண்டது. மற்ற செயற்கை துணிகளைப் போல சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை.
6. இது நெகிழ்வுத்தன்மை உடையது. அதனால், கிராண்டான உடைகள் சாதாரண ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் உள்ளிட்ட பல்வேறு ஆடைகள் தயாரிக்க ஏற்றதாக அமைகிறது.
7. இது தன் வண்ணத்தை தக்கவைத்துக் கொள்வதில் சிறந்து விளங்குகிறது. மொடால் துணிகள் சாயத்தை நன்றாக வைத்திருக்கின்றன. இதன் விளைவாக துடிப்பான வண்ணங்கள் மங்காமல் நீண்ட காலம் நீடிக்கும்.
8. இவற்றைப் பராமரிப்பது மிகவும் எளிது. இது பொதுவாக இயந்திரத்தில் துவைத்து உலர்த்தினாலும் சுருங்குவது சாயம் போதல், துணியின் தரம் குறைதல் போன்ற பிரச்னைகள் இல்லை.
9. ஒரு ஆடை இறுதி வடிவம் பெறும் போது ஒவ்வொரு பொருளின் நன்மைகளையும் மேம்படுத்த பருத்தி மற்றும் பாலியஸ்டர் போன்ற மற்ற இழைகளுடன் மொடால் பெரும்பாலும் கலக்கப்படுகிறது.
10. நவீன ஆடை வடிவமைப்பில் நிலைத்தன்மை மற்றும் வசதியான, நன்கு சீரமைக்கப்பட்ட, அன்றாட மற்றும் உயர் செயல்திறன் கொண்ட ஆடைகளுக்கு மொடால் ரக துணிகள் ஒரு சிறந்த கவர்ச்சிகரமான தேர்வாக விளங்குகிறது.
பருத்தி துணியில் உருவாக்கப்பட்ட ஜட்டி அணிந்திருக்கும் ஆண்கள்
Keywords: Cotton Underwear களுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய Modal Underwear















Comments
Post a Comment