கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். அது எல்லா விடையங்களுக்கும் பொருந்தாவிடினும் பாலியல் அடிமைகளாக வாழ்பவர்களுக்கு, அல்லது செக்ஸ் செய்யும் பழக்கத்திற்கு அடிமையான நபர்களுக்கு மிகவும் நன்றாக பொருந்தும்.
ஒரு செக்ஸிற்கு அடிமையான ஆணுக்கு(அல்லது ஒரு பெண்ணுக்கு) ஒரு பெண் மீதோ, அல்லது இன்னொர் ஆண் மீதோ காமம் ஏற்பட்டால் அந்த காமம் தீரும் வரை அவளை/அவனை நன்றாக அனுபவித்து விட்டு, அவர்களை பத்தோடு பதினொன்றாக்கி விடுவார்கள். அது மாத்திரம் அல்லாது, தம்முடன் தொடர்பில் இருக்கும் நபர்களுடன் தமது முன்னால் பாலியல் துணைகளை பகிர்ந்து கொள்வார்கள்.
சிலர் தமக்கான பாலியல் துணையை தேடிக்கொள்ள காதலைக் கூட தவறாக பயன்படுத்துவது உண்டு. காதலன்/காதலியை முழுமையாக திருப்தியடையும் வரை அனுபவித்து விட்டு, தேவை ஏற்பட்டால் அவர்களுடன் உடலுறவு கொண்ட வீடியோக்களை, Photos யை வைத்து அவர்களை மிரட்டி அடிபணிய வைத்து, அல்லது போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கி அவர்களை தமது நண்பர்களுக்கு விருந்தாக்குவார்கள்.
இவர்கள் புது பாலியல் துணைகளை காதல் வலை வீசி கரெக்ட் பண்ண ஆரம்பித்தது முதலே அவர்களுக்கு முழுமையான பாலியல் சுகத்தை கொடுத்து, அந்த சுகம் இல்லாமல் அவர்களால் வாழவே முடியாது என்ற நிலைக்குத் தள்ளி, அவர்களையும் செக்ஸ் அடிமையாக்கும் அளவுக்கு பாலியல் சுகத்தை கொடுத்து கெடுத்து விடுவார்கள்.
காமத்திற்கு அடிமையானவர்கள் அதிகமாக இளைஞர்கள், இளவயதினரையே நாடுவர். அதன் மூலம் அறியாத வயதில் உள்ள அவர்களை அவர்கள் தேவைக்கேற்ப Sexual Grooming செய்ய வசதியாக இருக்கும்.
Sexual Grooming என்பது தமது பாலியல் தேவைகளை நிறைவேற்ற Vulnerable Person(சமூகத்தில் பாதுகாப்பாக உணராத, பாதுகாப்பில்லாத, தனிமையில் உள்ள, மிகுந்த பயந்த சுபாவமுடையவர்கள், சிறுவர்கள், 18 வயதிற்கு கீழ்பட்ட சிறுவர்கள், விபரம் அறியாதவர்கள், பாலியல் கல்வி முறையாக கிடைக்காதவர்கள்) யை மிரட்டி, பயமுறுத்தி, ஆசைவார்த்தை காட்டி, ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுத்து, பணத்தை அள்ளிக் கொடுத்து கரெக்ட் பண்ணி, தன் இச்சைக்கு அடிபணிய வைக்கும் செயல்களாகும்.
இதில் வயது வித்தியாசம் எல்லாம் எத்தனை பேர் கூட இதுவரை படுத்து இருக்கோம் என்கிற அனுபவம் குறைவாக இருக்கும் போது தான் பிரச்சனையாக இருக்கும். பின்னர் அரிப்பெடுத்த ஓட்டையை எந்த குச்சியை வைத்து குடைந்தால் என்ன என்ற நிலை ஏற்பட்டு, கண்டவனுடன் எல்லாம் படுக்கும் நிலை ஏற்படும்.
தாம் புதிதாக சந்திக்கும் நபர்களை தாம் மாத்திரம் அனுபவிப்பது அல்லாது, தாம் அனுபவித்தவர்களுக்கு, அவர்களின் சம்மதத்துடனோ, அல்லது சம்மதம் இல்லாமலோ தம்முடன் தொடர்பில் உள்ளவர்களையும் தொடர்புபடுத்தி விடுவார்கள்.
இவர்களின் இந்தக் கூட்டிக் கொடுக்கும் குணத்தால், இவர்களின் இந்த அரிப்பெடுத்து அலையும் குணத்தால் இவர்களிடையே பால்வினை நோய் தொற்றுகள் சீக்கிரம் பரவலடைவது உண்டு.
இதனை சற்று கூர்ந்து அவதானித்தால், இது ஒரு உணவுச்சங்கிலி(Food Chain) போன்று வெளித்தெரியும். உணவுச் சங்கிலி (Food Chain) என்பது ஒரு சூழல் மண்டலத்தில், உயிரினங்கள் உணவிற்காக ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் நேர்க்கோட்டுத் தொடர்பாகும். இந்த வயிற்றுப் பசிக்கான நேர்கோட்டு தொடர்பை, இவர்கள் உடல் பசிக்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
உடலுறவு வேட்கையை தூண்டும் முகமாக பதிவுகளை சமூக வலைத்தளங்களில் இவர்கள் பரவலாக பதிவர். அதன் மூலம் சிக்கும் சில்வண்டுகளை உள்பெட்டிக்குள்(DM/Direct Message, Inbox) வைத்து தனிமையில் சந்திக்க ஆசை காட்டி தமது வலையில் சிக்க வைப்பர்.
அவன் ஆம்பள ஐஸ்வர்யாராயாவே இருந்தாலும்
எப்போதும் புதுசை தேடுறவனை விட, பழசை மதித்து வாழ்பவன் தான் வாழ்க்கையில் ஜெயிப்பான்.
இந்த உடல் பசி சார்ந்த தொடர்பானது(Sex Ring/Network) சிறிய புள்ளியில் ஆரம்பித்து ஒரு ஆலமரம் போல பல கிளைகள், விழுதுகளுடன் நன்றாக நமது சமூகத்தில் வேரூன்றி இருக்கும். இதனை விபச்சாரத்துடன் ஒப்பிட முடியாது. ஆனால் இந்த வலைப்பின்னலில் இருந்து விலகியவர்கள் நாளடைவில் நடுத்தெருவில் ஆண்/பெண் விபச்சாரிகளாக நிற்பது தான் உண்மை.
இந்த உணவுச்சங்கிலியில் எங்காவது தொடர்பு துண்டிக்கப்பட்டால், அந்த தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தவர்கள் கதை அவ்வளவு தான்! காமம் அவர்களை வாட்டி வதைத்து, காய்ந்து போக வைத்து கருவாடாக்கிவிடும். அப்புறம் தேவிடியா வாழ்க்கை தான்!
காமத்தை அடக்க காதல் ஒன்றே வழி! ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்தனுக்கு ஒருத்தன், ஒருத்திக்கு ஒருத்தி என்று வாழப் பழகினால் கண்டாரவொழியாகும் நிலை உங்களுக்கு ஏற்படாது.















Comments
Post a Comment