வண்ணங்களின் பண்டிகை என ஹோலி பண்டிகை(Holi) அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் பெரும்பாலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் தற்போது தென் இந்தியாவிலும் இந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டம் அதிகரித்து வருகின்றது.
குளிர்காலம் முடிந்து வசந்த காலம் துவங்குவதை குறிக்கும் வகையிலும் இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனால் தான் ஹோலி கொண்டாட்டத்தின் பொழுது மஞ்சள் நிறம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
வடமாநிலங்களை பொறுத்தவரையில், ஒருவருக்கொருவர் வண்ண தூள்களை தூவி மிகவும் மகிழ்ச்சியாக இந்த விழாவை கொண்டாடுகின்றனர். இந்த விழாவின் போது, ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டை களைந்து மிகவும் ஒற்றுமையாக இந்த விழாவை கொண்டாடுவது தான் இதன் சிறப்பு.
எப்போதும் ஒருவர் மீது இன்னொருவர் நிறப்பொடிகளை தூவி, பூசியே ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் காலமாற்றம் காரணமாக பல விடையங்கள் புதிதாக இந்தப் பண்டிகளைகளில் உள்வாங்கப்பட்டு வருகின்றன.
அதில் பிரதானமான ஒன்று தான் Ragging(பகிடிவதை, துன்புறுத்தல்) கலாச்சாரத்துடன் இணைக்கப்படும் ஹோலி கொண்டாட்டங்கள் ஆகும். ஒருவரை சந்தோஷப்படுத்துவதற்குப் பதிலாக, அவர் மனதளவில் கஷ்டப்படும் வகையில் கும்பலாக சேர்ந்து நிறப்பொடிகளை அவர் மீது அடித்து, பூசி ஹோலியை சிலர் கொண்டாடுகின்றனர்.
சிலர் தமது நண்பர்களை நிர்வாணப்படுத்தி, அவர்களின் உடலில், குறிப்பாக அந்தரங்கப் பகுதிகளுக்கு நிறப்பொடிகளை பூசி விளையாட்டை வேறு திசை நோக்கி திருப்புகின்றனர். Bad Touches(தவறான தொடுகை) களை இயல்பான ஒன்றாக மாற்றி தமது உள் நோக்கம் சார்ந்து, ஹோலி பண்டிகளை கொண்டாடுகின்றனர்.
தவறான தொடுகைகளை ஊக்குவிக்கும் முகமாக காதலர்களுக்கு என்றே பிரத்தியேகமான ஹோலி பண்டிகள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.





Comments
Post a Comment