தெற்காசிய நாடுகளிலும், சில ஆசிய நாடுகளிலும் லுங்கி, சாரம், கைலி என்பது ஆண்களின் விருப்பத்திற்கு ஏற்ற, நம் நாட்டின் கால நிலைக்கு உகந்த, அன்றாடம் அணியக் கூடிய ஆடையாக உள்ளது. லுங்கியானது இரண்டு வகைப்படும். ஒன்று முனைகள் இணைக்கப்பட்டு ஒரு துணியால் ஆன Tube போன்று இருக்கும் லுங்கி, அதனை சாரம் என்றும் அழைப்பர். மற்றையது வேட்டி போன்று முனைகள் இணைக்கப்படாத லுங்கி.
அவற்றின் அமைப்பில் வித்தியாசம் இல்லாவிட்டாலும், அவை உருவாக்கப்படும் விதம், அவற்றின் நீளம், அவற்றின் உயரம், அவற்றில் உள்ள அலங்கார வேலைப்பாடுகள், அவை அணியப்படும் விதம், அதாவது லுங்கி, சாரம், கைலி கட்டும் முறைகளை வைத்து அவற்றை இந்தியா, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், மியன்மார், இந்தோனேஷியா என வகைப்படுத்தலாம்.
நம் நாட்டு ஆண்கள் லுங்கி, சாரம், கைலி கட்டும் முறைகளை ஏற்கனவே விரிவாக பார்த்துள்ளோம். இந்தப் பதிவில் எப்படி பங்களாதேஷ் ஆண்கள் லுங்கியை முறையாக அணிகிறார்கள் என்று பார்ப்போம்.
பங்களாதேஷ் ஆண்கள் லுங்கியை அணியும் போது, பெண்கள் சேலை கட்டும் போது கொய்யம் வைப்பது(Pleats) போல மடிப்புகளை உருவாக்கி, அதனை அவர்கள் இடுப்புப் பகுதியில் திருகி/முறுக்கி சொருகிக் கொள்கிறார்கள்.
"கொய்யம்" (Koyyam) என்பது பொதுவாகச் சேலையின் முன் பகுதியில் மடிப்புகளை (Plaits/Pleats) அமைத்து, இடுப்பில் சொருகும் பாணியைக் குறிக்கும் பேச்சுவழக்கு வார்த்தையாகும்.



















Comments
Post a Comment