ஒரு ஆம்பள இன்னொரு ஆம்பள கூட செக்ஸ் பண்ணினா ஹராமா? ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் உடலுறவு கொள்வதை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுதல், தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுதல் என்பர். தன்னினச்சேர்க்கை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று என மார்க்க அறிஞர்கள் ஹஸ்ரத் நபி லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஒரு வரலாற்று கதையை ஆதாரமாக வைத்தே நிறுவுக்கின்றனர்.
லூத் (அலை) அவர்கள் இஸ்லாமிய நம்பிக்கையின்படி, அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட ஒரு நபி மற்றும் தூதர் ஆவார். இவர் இப்றாஹிம் (அலை) அவர்களின் மருமகன் ஆவார், மேலும் ஸதோம் மற்றும் கொமோரா நகர மக்களுக்கு ஓரிறைக் கொள்கையை போதிக்க அனுப்பப்பட்டார். மக்கள், குறிப்பாக ஓரினச்சேர்க்கை போன்ற தீய செயல்களில் ஈடுபட்டதால், அல்லாஹ் அவர்களை அழித்து, லூத் (அலை) மற்றும் அவரது குடும்பத்தினரை (அவரது மனைவி தவிர) காப்பாற்றினான் என்பதே அந்த வரலாற்று கதையின் சுருக்கம்.
குர்ஆன் கூறுவதை ஒவ்வொரு மார்க்க அறிஞர்கள் ஒவ்வொரு வழியில் புரிந்து கொள்வார்கள், அதனை நமக்கு போதிப்பார்கள். ஆனால் இந்தக் கதைகளில் கூறப்படுவது நெறிப்படுத்தப்படாத, காதல் இல்லாத, வெறும் காமம் சார்ந்த ஓரின உறவுகளை பற்றியதாகும்.
ஓரின உறவுகள் ஆண்களுக்கு மாத்திரம் தடை செய்யப்பட்டதாக குர்ஆன் கூறுகிறதா? அந்தக் காலத்தில் ஒரு ஆணின் ஆண்குறியை புணர்புழையினுள்(ஆசனவாய்/பெண்குறி) நுழைத்து உடலுறவு கொள்வதையே செக்ஸ் என கருதினார்கள். அதனால் பெண்கள் ஓரினச்சேர்க்கையில்(Lesbian) ஈடுபடுவது பற்றி ஏன் குர்ஆனில் எதுவும் கூறப்படவில்லை. திருநங்கை/திருநம்பிகள் பற்றியும் குர்ஆனில் எந்தக் குறிப்புகளும் இல்லை.
ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணின் ஆண்குறியை பார்ப்பது, தொடுவது தவறு என்கிறது. ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணுக்கு சுன்னத் செய்வது போன்ற தேவையின் நிமித்தம் தொடலாம், பார்க்கலாம் என்கிறது.
ஒரு ஆண் இன்னொரு ஆண்யை காமத்துடன் அனுகுவது தவறு என்கிறது. ஒரு அண் இன்னொரு ஆணுடன் உடலுறவு கொள்வது தவறு என்கிறது. இரு ஆண்கள் அம்மணமாக அருகருகே தூங்குவதும் தவறு என்கிறது ஹதீஸ்.
இவ்வாறான தடைகளை ஓரினச்சேர்க்கை சார்ந்து இஸ்லாம் விதித்துள்ளதாக அறிஞர்கள் கூறினாலும், ஊருக்கு மட்டும் தான் உபதேசம் என்பது போல இன்றும் மதரஸாக்களில் ஆண்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள். இஸ்லாத்தையும், ஷரியா சட்டங்களையும் கடுமையாக கடைப்பிடிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்றும் "Bacha Bazi" முறை உள்ளது.
பச்சா பாஸி(பாரசீகம் மொழியில் சிறுவன் விளையாட்டு என பொருள்படும்) என்பது ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள ஒரு சிறுவர் பாலியல் பழக்கமாகும்.
இதில் ஆண்கள் வளரிளம் பருவ சிறுவர்களை(Teenage Boys) சுரண்டி அடிமைப்படுத்துகிறார்கள். சில சமயங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்காகவும், மற்றும்/அல்லது பாரம்பரியமாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மட்டுமே அணியும் ஆடைகளை அணியவும், பொழுதுபோக்கிற்காக நடனமாடவும் அவர்களை கட்டாயப்படுத்துகிறார்கள்.
இளம் சிறுவனை சுரண்டும் நபர் பச்சா பாஸ் (அதாவது "சிறுவன் விளையாட்டு வீரர்") என்றும், இளம் சிறுவன் பச்சா என்றும் அழைக்கப்படுகிறான்.
இந்த நடைமுறைக்குள் உள்வாங்கப்படும் சிறுவர்கள் தெருக் குழந்தைகள் போன்ற வறுமையான மற்றும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் இருந்து வருகிறார்கள். முக்கியமாக உறவினர்கள் இல்லாதவர்கள் அல்லது தங்கள் குடும்பங்களிலிருந்து கடத்தப்பட்டவர்கள், சில சமயங்களில், கடும் வறுமை அல்லது பட்டினியை எதிர்கொள்ளும் குடும்பங்கள், உணவு அல்லது பணத்திற்கு ஈடாக தங்கள் இளம் மகன்களை ஒரு பச்சா பாஸிடம் விற்கவோ அல்லது அவர்களை "தத்தெடுக்க" அனுமதிக்கவோ நிர்பந்திக்கப்படலாம்.
பச்சாக்கள் , மாறுவேடம் அணிதல் மற்றும் பாலியல் பொழுதுபோக்கு மூலம் தங்கள் புரவலர்களுக்கும் அவர்களின் விருப்பங்களுக்கும் சேவை செய்யக் கடமைப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவனவன் தன் இஸ்டத்திற்கு சக ஆண்களையே அனுபவித்து ஆம்பள சுகத்தை ருசிக்கும் போது நீங்கள் மாத்திரம் அந்த தடைகளுக்குள் உங்களை நீங்களே சிறைப்பிடித்துக் கொண்டு உள ரீதியாக உங்களை வருத்திக் கொள்வது ஏன்?
சில மதக் கொள்கைகள், நடைமுறைகள் தற்காலத்திற்கும் ஏற்றவை அல்ல. அவை காலாவதியான நடைமுறைகள். அந்தக் காலத்திற்கு சரியானவையாக இருந்தவை இந்தக் காலத்திற்கு சரியாக அமையாது. எல்லாம் மனசு தாங்க.
முன்னர் சனத்தொகை குறைவு. ஆனால் இன்று சனத்தொகை அதிகம் அதனை கட்டுப்படுத்த இயற்கை தேர்ந்தெடுத்த Natural Selection(இயற்கை தேர்வு) தான் தன்னினச்சேர்க்கை. இதன் மூலம் குழந்தை உருவாகாது. ஆனால் ஆண்களின் பாலியல் இச்சை தணிக்கப்படும்.
எந்த மதமும் நெறிப்படுத்தப்படாத, விபச்சாரம் போன்ற உடலுறவை சரி என்று வாதிடாது. அது போலவே மிகவும் நெறிப்படுத்தப்பட்ட, காதலுடன் கூடிய உடலுறவுகளை தவறு என்றும் வாதிடாது.
நீங்கள் கண்டவனுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கடவுளுக்கு பதில் சொல்லுங்கள். உங்களை இவ்வாறு படைத்ததும் கடவுள் தான். இது உங்கள் பிறப்பில் ஏற்பட்ட குறைபாடா? நிச்சயமாக இல்லை. படைத்தவன் எப்போதாவது பிழை விடுவானா? உங்களைப் படைத்தது இப்படி உங்களை சோதிக்கவா? நிச்சயமாக இல்லை. வாழ்க்கையை வாழுங்க ப்ரோ! ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்!
Keywords: ஓரினச்சேர்க்கை, தன்னினச்சேர்க்கை










Comments
Post a Comment