காமத்தை பொறுத்தவரையில் ஆண்களிடம் வாய் வார்த்தைகளுக்கு அதிக இடம் இருக்காது. எல்லாம் ஒரு வித புரிதல் மூலமே ஆரம்பமாகி நிறைவடையும். பழம் நழுவும் போதே புடிச்சுக்கணும் அல்லது சாப்பிட வேண்டும். குறிப்பறிந்து நடந்து கொண்டால் வேலை சீக்கிரம் முடிந்து விடும். நீங்களும் அடுத்த வேலையை பார்க்கச் செல்லலாம்.
ஆண்களுக்கிடையிலான சில தருணங்களை விளக்கம் கேட்டு, நெருங்கினால் அவர்களிடம் இருந்து எதிர்மறையான பதில்களையே நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழ் நிலைகள் ஏற்படும். அதற்கான காரணம் அநேகமான ஆண்கள் தமது உண்மையான உணர்வுகளை மறைத்து முகமூடி அணிந்து வாழ்வதனால் ஆகும்.
அனுபவப் பதிவு: காலேஜ் படிக்கிறப்ப என்கூட படிச்ச ஒரு பையன எனக்கு புடிச்சிருந்துச்சு. கருப்பா இருந்தாலும் களையா இருந்தான். அவனோட மூக்கு அழகுல தான் நான் விழுந்திட்டேன்னு சொல்லலாம். காலேஜ்ல என் பக்கத்துல தான் இருப்பான். எப்பவும் என்கிட்ட பேசிட்டே இருப்பான்.
காலேஜ் முடிச்சு வீட்டுக்கு போனப்புறமும் எங்கிட்ட தான் Phone பண்ணி பேசிட்டே இருப்பான். காலேஜ்ல என் பக்கத்துல இருக்குறப்பலாம் அவனோட ஒரு கை என் தொடை மேலயே வச்சிருப்பான். தோனும் போதெல்லாம் என் தொடையை தடவுவான். என்னை ரொம்ப அழகா இருக்கேன்னு எப்பவும் வருணிச்சு பேசிட்டே இருப்பான். என்னோட Hand Kerchief(கைக்குட்டை) எடுத்து அவன் யூஸ் பண்ணுவான்.
நாம ரெண்டு பேரும் எங்கயாச்சும் போயி தனியா வாழலாமான்னு கிண்டலா கேப்பான். அதை வச்சு அவனும் என்னை லவ் பண்ணுறானோன்னு தோணிச்சு. அதனால வெக்கத்தை விட்டு, நான் அவனுக்கு, "உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும், நான் உன்ன லவ் பண்ணுறேன்" அப்டின்னு ஒரு மெசேஜ் அனுப்பி விட்டேன்...
அதுக்கு அவன், "டேய்.. அவனா நீ.. போடா புண்ட " அப்டின்னு திட்டி தீர்த்திட்டான்.. ஒருவேளை என்னைய ஆழம் பார்த்திருப்பானோ? அவனுக்கு என் மேல சந்தேகம் இருந்ததால தான் என் வாயை கிளறுவதற்காக என் உணர்வுகளுடன் விளையாடினானா?




Comments
Post a Comment