மருந்தீடு என்றது இது ஏதோ புது விஷயம் என்று நினைத்து விட வேண்டாம். இதனை பல்வேறு விதமாக அழைப்பர். இதனை பொதுவாக வசிய மருந்து என்பர்.
சிலர் பிறரை வசியப்படுத்தவும். அழிக்கவும் மருந்தீடுகள்(செய்வினை) செய்து வைப்பதுண்டு. மருந்தீடு என்பது நச்சு, கிருமி, பிணக்கழிவுகளில் இருந்து செய்யப்படுகிறது. இதில் ஆண்டு பெண்ணிடு அதாவது ஆண் வசியம், பெண் வசியம் என இருவகை உண்டு. இந்த மருந்திடைப் போக்கிடும் இடுமருந்து கல்பத்தை, ரோமரிஷி தன் வைத்திய காவியத்தில் அருளி உள்ளார்.
"ஆண்டும் பெண்ணிடும் கருவாகப் போக்கென்று சொல்லக் கேளு காட்டுவேன் இடுமருந்து கவடில்லாமல் நன்றாக தீர்ந்திடும் மருந்தைக் கேளு வாட்டவே கூழ்பாண்டக்காய் நறுக்கிக் கொண்டு அப்பனே தேங்காய்ப்பால் இட்டுக் காய்ச்சி கூட்டவே மூன்றுநாள் தின்றாயானால் குறைந்துவிடும் மருந்தினுடை வேகந்தானும்"
- ரோமரிஷி வைத்திய காவியம் 500. (ரோமரிஷி காகபுசுண்டரின் மாணவர்- ரோம நாட்டிலிருந்து வந்தவர்)
இப்பாடலில் குறிப்பிடப்படும் கூழ்பாண்டக்காய் என்பது வெண்பூசணிக்காயைக் குறிக்கும்.
செய்முறை:
வெண் பூசணிக்காயைத் தோலுடன் நறுக்கிக் கொண்டு தேங்காய்ப்பாலில் இட்டுக் காய்ச்சி மூன்று நாள் உண்ண வேண்டும். இவ்வாறு செய்தால் அனைத்துவகை இடுமருந்தையும் முறித்து நம்மை நலமாக்கும்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்களாலும் பூச்சிமருந்து தெளிக்கப்பட்ட காய்கறிகளாலும் உடலில் நச்சுக்கள் சேர்கிறது. இந்த கல்பத்தை மூன்று மாதத்திற்கு ஒருமுறை உண்டால் நம் உடலில் உள்ள நச்சுக்கள் போய்விடும்.
இவ்வாறு தயாரிக்கும் இடுமருந்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வசிய மருந்து உடலில் இருந்து நீங்க ஆரம்பித்து விடும்.
Read More: வயிற்றில் உள்ள வசிய மருந்து எடுக்க







Comments
Post a Comment