ஆயில் மசாஜ் செய்து கொள்வது நமது சமூகத்தைப் பொறுத்தவரையில், நம் கலாச்சாரத்துடன் ஒன்றிய ஒரு பழக்கமாகும். இருப்பினும் அதனை முறையாக மேற்கொள்ள பல ஆண்களுக்கு தெரியாது. அதே நேரம் நகர வாழ்க்கையுடன் ஒன்றிப்போயுள்ள ஆண்களுக்கு அதற்கு நேரமும் இல்லை, அதற்கான இடவசதியும் இல்லை எனலாம்.
ஆண்கள் ஆயில் மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்கும் போது தான் அதன் முழு பலனும் கிடைக்கும். கிராமப்புறங்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க இலகுவாக இருந்தாலும் நகர் புறங்களில், டைல் பதித்த பாத்ரூம்களில் எண்ணெய் குளியல் போடுவது இலகுவான விடையம் இல்லை. வழுக்கி விழும் சந்தர்ப்பமும் அதிகம், அதே நேரம் எண்ணெய்க் குளியல் போட்ட பின்னர் பாத்ரூமை சுத்தம் செய்வது அதிக வெறுப்பையும் ஆண்களுக்கு ஏற்படுத்தும்.
முறையாக எண்ணெய்க்குளியல் போடத்தெரியாத ஆண்களும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் சுகத்தை அனுபவிக்க ஆயில் மசாஜ் செய்யும் இடங்கள் தற்போது அதிகம் நீர்வீழ்ச்சிகளை அண்மித்த பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ளன.
நீர்வீழ்ச்சிகளில் நீராட வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க அதனை அண்மித்த பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆயில் மசாஜ் செய்யும் இடங்கள் ஆண்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளது. பொது இடங்களில் ஜட்டியுடன் நின்று உடல் முழுக்க எண்ணெய் பூசி மசாஜ் செய்து கொள்வது ஒரு புதுமையான அனுபவமாக உள்ளதாக பல ஆண்கள் கருதுகின்றனர்.
அவதானம்: அருவிகளில், கற்பாறைகளின் மீது ஏறி குளிக்கும் முன்னர், உடலில் உள்ள எண்ணெய் பசையை சோப் போட்டு நீக்க மறக்க வேண்டாம். அதன் மூலம் பாதுகாப்பற்ற இடங்களில், வழுக்கி விழும் சந்தர்ப்பங்களை தவிர்க்கலாம்.
குறிப்பு: பொது இடங்களில் எண்ணெய் மசாஜ் செய்து கொள்ள விரும்பும் ஆண்கள் கட் ஜட்டி(Briefs) அணிந்திருப்பது மசாஜ் செய்பவருக்கு உதவியாக இருக்கும்.
Keywords: நீர்வீழ்ச்சி, அருவி













Comments
Post a Comment