"சம்மாளம் கோலி" உட்காருவது என்பது ஆண்களும் பெண்களும் உணவு உண்ணும் போதும், மத சடங்குகளில் அல்லது திருமணம் செய்து கொள்ளும் போது நாகரீகமாக உட்காரும் முறையாகும். இந்து கோயில்களில் யாகம் செய்யும் போது சம்மாளம் கோலி இருக்க வேண்டும் என்பது நியமம்.
சம்மாளம் கோலி உட்காருதல் என்றால் இடது கால் பாதம் வலது முழங்காலுக்கு கீழும், வலது கால் பாதம் இடது முழங்காலுக்கு கீழும் அமையும் வகையில் கால்களை குறுக்காக மடித்து உட்காருவது ஆகும். உங்கள் வசதிக்கு ஏற்ப, கால்களை மாறியும் இவ்வாறு வைக்கலாம்.
குறிப்பு: ஆண்கள் நான்கு முழம் வேட்டி கட்டிக் கொண்டு சம்மாளம் கோலி உட்காரும் போது அவதானமாக இருக்க வேண்டும். உங்கள் வேட்டி விலகி, எதிரில் இருப்பவருக்கு உங்கள் அந்தரங்கம் வெளித்தெரியலாம். சிலர் நான்கு முழ வேட்டி கட்டிக் கொண்டு சம்மாளம் கோலி உட்காரும் போது, வேட்டி விலகுவதை கட்டுப்படுத்த, வேட்டியின் சால்வையை, வேட்டியின் மேல் ஒரு துண்டு போல கட்டிக் கொண்டு உட்காருவது உண்டு.
குறிப்பு: கீழே நீண்ட நேரம் குந்தியிருக்க கஷ்டமாக உணர்பவர்கள், சம்மாளம் கோலி உட்காரும் போது கீழே ஒரு பலகை குற்றியை வைத்து இருப்பது உண்டு.
பொது இடங்களில் கால்களை நீட்டிக் கொண்டு, கால்களை தூக்கி வைத்துக் கொண்டு இருப்பது நாகரீகமான செயல் அல்ல.
சம்மாளம் கோல் இருக்கும் போது ஆண்கள் கூனிக் கொண்டு இருப்பதை விட கெத்தாக நிமிர்ந்து இருப்பதை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். அதற்கு உதவியாக சிலர், சுவரோடு சாய்ந்து இருப்பது உண்டு.
சிலர் முழங்கால்களில் கைகளை ஊன்றிக் கொண்டு நிமிர்ந்திருக்க முயற்சிப்பர். நீண்ட நேரம் கீழே சம்மாளம் கோலி உட்கார்ந்திருக்கும் போது(பழக்கம் அற்றவர்கள்) கால்கள் விறைப்படைந்தால், எழும்பும் போது அவதானமாக எழும்பவும்.




Comments
Post a Comment