பூணூலானது பொதுவாக பிராமணர்கள் அணிவார்கள் என்ற கருத்து நிலவினாலும், எந்த ஆணும் பூணூல் அணியலாம். உதாரணமாக: பித்ரு கடன்கள்(திதி, திவசம் கொடுக்கும் ஆண்கள்) செய்யும் போது எல்லா சாதியைச் சேர்ந்த ஆண்களும் பூணூல் அணிந்திருப்பார்கள்.
ஜனேயு(Janeu) என்பது இந்து மதத்தில் ஆண்கள் அணியும் பரிசுத்தமான பூணூல்(Sacred Thread) ஆகும். இது யக்ஞோபவீதம்(Yagnopaveetham) என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் கலாச்சாரத்தில் இது பொதுவாக பூணூல்/பூநூல் (Poonal) என்று அழைக்கப்படுகிறது.
ஜனேயு என்றால் என்ன? இது பருத்தியால் ஆன மூன்று இழைகளால் ஆன ஒரு புனிதமான நூல். இது இடது தோள்பட்டையில் இருந்து வலது இடுப்பு வரை அணியப்படுகிறது. உபநயனம் (பூணூல் கல்யாணம்) என்ற சடங்கின் போது, குரு அல்லது தந்தை இந்த நூலை சிறுவனுக்கு அணிவிப்பார்கள். இந்தச் சடங்கு ஒரு சிறுவனை கல்வியிலும், ஆன்மீகத்திலும், ஒழுக்கத்திலும் தகுதியுடையவனாக மாற்றும் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
மூன்று வெண்ணிறப் பருத்தி இழைகளால் செய்யப்பட்ட இந்த புனித நூல், எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும், சொல் உண்மையாக இருக்க வேண்டும், செயல் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை தினமும் நினைவூட்டுகிறது.
பூணூலின் மூன்று இழைகள் பல விஷயங்களை உணர்த்துகின்றன. முக்குணங்கள்(சத்வ, ராஜச, தமச குணங்கள்), மூன்று கடன்கள்(குரு கடன், பித்ரு கடன், மற்றும் ரிஷி கடன்). மூன்று தெய்வங்கள்(பிரம்மா, விஷ்ணு, சிவன்) என்பன அவையாகும். பூணூலின் மூன்று இழைகளையும் இணைக்கும் முடிச்சு 'பிரம்மக்ரந்தி' என்று அழைக்கப்படுகிறது, இது பரம்பொருளைக் குறிக்கிறது. பூணூல் அணிந்த பிறகு, அந்த நபர் "துவிஜா"(இரண்டாவது முறை பிறந்தவர்) என்று அழைக்கப்படுகிறார். இது அறிவு சார்ந்த ஞானப் பிறப்பைக் குறிக்கிறது.
பூணூலை எப்போதும் அணிந்திருக்க வேண்டும்? ஆண்கள் அணிந்திருக்கும் பூணூலை மாற்றும் சடங்கு (ஆவணி அவிட்டம்/உபகர்மம்) பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை, சிராவண மாத பௌர்ணமி அன்று நடைபெறும். ஆண்கள் குளிக்கும்போதோ அல்லது அசுத்தமான இடங்களுக்குச் செல்லும்போதோ, பூணூலை காதில் கட்டிக்கொள்ள வேண்டும்(ஏனெனில் காதில் தேவதைகள் வாசம் செய்வதாக நம்பிக்கை). பூணூல் அறுந்துவிட்டாலோ அல்லது அசுத்தமாகிவிட்டாலோ, புதிய பூணூலை மந்திரம் ஓதி மாற்ற வேண்டும்.
பிராமணர், க்ஷத்ரியர்கள், செட்டியார்கள், ஆயிர வைசியர்கள் மற்றும் விஸ்வகர்மர்கள் ஆண்டுக்கொரு முறை ஆவணி அவிட்டம் நாளில் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதைப் பெரும் விழா போன்று பெருமையுடன் கொண்டாடுகிறார்கள்.
ஆண்களுக்கு பதின்மூன்று வயதிற்குள் இப்பூணூல் அணியப்பட வேண்டுமென்பது மரபு. பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகிறது.
முதன்முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று கூறுவர். பூணூல் அணிந்தவன் காயத்திரி என்ற மந்திர அறிவுரை பெற்றுப் புதுப்பார்வை பெறுகிறான் என்பது இதன் பொருள்.
திருமணம் ஆகாத பிரம்மச்சாரிகள் இருபிரி பூணூலும், மணம் முடித்தவர்கள் முப்பிரி பூணூலும் அணிவர். பிராமணர்களைத்தவிர ஆயிரவைசியர்களும்,விஸ்வகர்மர்களும், வேறு சில வகுப்பினரும் கூட பூணூல் அணிவர்.
உபநயனம் என்றதும் நாம் பிராமணர்கள் பூணூல் போடுவதை எண்ணிக்கொள்கிறோம். பழங்காலத்தில் ஏதாவது ஒன்றை முறைப்படி கற்றுக்கொள்ளும் எல்லாருமே பூணூல் போட்டார்கள். நான் சின்னப்பையனாக இருக்கும்போது நகர செட்டியார்கள் மற்றும் ஆயிர வைசியர்கள்பொற்கொல்லர்களும் தச்சர்களும் சிற்பிகளும் பூணூல் போட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். உபநயனம் என்றால் ‘இதோ ஒரு கல்வியைக் கற்றுக்கொள்ளப்போகிறேன்’ என்று ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் அடையாளம்தான். இன்றைக்கு பிராமணர்கள் மட்டும் பூணூல் போடுகிறார்கள். அதுவும் வெறும் சடங்காகப் போடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் திருமணம் நடப்பதற்கு முந்தையநாள் உபநயனம் செய்து பூணூல் போட்டுக்கொள்கிறார்கள்.
முஸ்லிம் ஆண்களின் ஆண்குறியின் முன் தோலை நீக்கும் சடங்கை சுன்னத்து கல்யாணம், மார்க்க கல்யாணம் என்பது போல இந்து ஆண்கள், பிராமணர்கள் பூநூல் அணிவதை பூணூல் கல்யாணம் என்கிறார்கள்.
பூணூல் என்பது சமஸ்கிருதத்தில் யக்ஞோபதவீதம் என்று அழைக்கப்படுகிறது. உபநயனத்தின் போது வடுவுக்கு பிரம்மம் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் பின்னர் அவன் த்விஜன் என அழைக்கப்படுகிறான். அதாவது உபநயனத்தின் போது அவன் இரண்டாவது பிறப்பைப் பெறுகிறான். அது முதல் பருத்தி நூலின் மூன்று இழைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பூணூலை அவன் அணிந்து கொள்கிறான்.
திருமணமாகாத பிரம்மச்சாரிகள் மூன்று இழைகள் கொண்ட ஒன்றைப் பூணூலையும், திருமணமானவர்கள் ஆறு இழைகள் கொண்ட இரண்டு பூணூலையும், அணிந்து கொள்ள வேண்டும்.
சில சிறப்புக் காரணங்களுக்காக சிலர் 9 இழைகளைக் கொண்ட 3 பூணூலை அணிந்து கொள்ளும் பழக்கமும் காணப்படுகிறது.
பூணூல் மூன்று விதமாக அணிந்து கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவை வருமாறு:
1. உபவீதம் - இது இயல்பான முறையாகும். உதாரணத்திற்கு நாம் வீட்டில் சாதாரணமாக இருக்கும் போது இடதுதோள்பட்டையின் மேல் பகுதியிலிருந்து வலதுபுறம் கைப்பகுதிக்கு அணிந்து கொள்வது. இந்தப் பொதுவான முறை உபவீதம் எனப்படுகிறது.
2. ப்ராசீனாவீதம் - பித்ரு கார்யங்கள் செய்யும் போது பூணூல் ப்ராசீனவீதமாக அணிந்து கொள்ளப்பட வேண்டும். ப்ராசீனாவீதத்தின் போது வலது தோள்பட்டையின் மேல் பகுதியிலிருந்து இடது கை வரை கீழ்நோக்கி பூணூல் இருக்கும். தர்ப்பணம் அல்லது ச்ராத்தம் செய்யும் போது கர்த்தா இவ்வாறு அணிந்து கொண்டிருப்பதை பார்க்கலாம்.
3. நிவித்தம் - பூணூலை அணிந்து கொள்ளும் மூன்றாவது முறை நிவித்தம் என்றழைக்கப்படுகிறது. பூணூலை கழுத்தைச் சுற்றி மார்பு வரையில் மாலை போல் அணிந்து கொள்வதே நிவித்தம் எனப்படுகிறது.
* தற்காலத்தில் நாம் சட்டை அணிந்து கொண்டு வெளியே போகும் போது பூணூலை இவ்வாறு அணிந்து கொள்ள வேண்டும்.
* இதே போல் இயற்கை உபாதைகளை கழிக்கும் போதும், உடலைச் சுத்தப்படுத்திக் கொள்ளும் போதும் நிவித்தமாக பூணூலை போட்டுக் கொள்ள வேண்டும்.
* இறந்தவர்கள் வீடுகளுக்கு 10 நாட்களுக்குள் சென்று துக்கம் விசாரிக்கும் போதும் பூணூலை நிவித்தமாகத்தான் போட்டுக் கொள்ள வேண்டும்.
பூணூல் தயாரிக்கும் முறை:
யக்ஞோபவீதம் என்பது உபநயனத்தின் போது அணிந்து கொள்ளப்படுவதாகும், இந்தப் பூணூல் தயாரிக்கப்படும் முறை மிகவும் சுவாரஸ்யமானதாகும். வேதம் கற்றுக் கொடுக்கத் தகுதி உள்ளவர்களும், திருமணமான பெண்களும் பூணூல் தயாரிக்கத் தகுதி உடையவர்களாவர். பருத்தியால் ஆன நூலை ஒரு சுத்தமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு. அதனை விரல்களைச் சுற்றி வலதுபுறமாக சுற்ற வேண்டும். இவ்வாறு 96 முறை சுற்ற வேண்டும். பின்னர் அதன் இரு முனைகளையும் பிடித்துக் கொண்டு மூன்றாக மடித்து சம அளவில் வருமாறு செய்ய வேண்டும். அதன் பின்னர் அந்த இரு முனைகளையும் சேர்த்து முடிச்சு போட வேண்டும். இவ்வாறு போடப்படும் முடிச்சுக்கு பிரம்ம முடிச்சு என்று பெயர். இந்த முடிச்சு போடும் போது ஒரு குறிப்பிட்ட மந்த்ரம் மௌனமாக ஜபிக்கப்பட வேண்டும். இடது தோள்பட்டையிலிருந்து வலது கைப் பகுதிக்கு குறுக்காக வருமாறு பூணல் அணியப்பட வேண்டும்.
இந்தப் பூணூல் தொப்புளுக்கு கீழே இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் அதை தொப்புள் வரை இருக்குமாறு மடித்து முடிச்சு போட்டுக் கொள்ளலாம்.
மேலே கூறப்பட்டது போல் பிரம்மச்சாரிகள் ஒற்றை பூணுலையும், கிரஹஸ்தர்கள் இரண்டு பூணூல்களையும் போட்டுக் கொள்ள வேண்டும்;.
கிரஹஸ்தர் ஒருபோதும் த்ருதீய வஸ்த்ரம் எனப்படும் மூன்றாவது வஸ்த்ரம் இல்லாமல் இருக்கக்கூடாது. ஆனால் சிலர் த்ருதீய வஸ்த்ரம் அணிந்து கொள்ளாமல் இருப்பார்கள். த்ருதீய வஸ்த்ரத்திற்கு பதிலாக மூன்றாவது பூணூல் அணிந்து கொள்வதை சிலர் பழக்கமாகக் கொண்டுள்ளனர்,
யக்ஞோபவீதம் போட்டுக் கொள்வதற்கான விதிமுறைகள்
பூணுல் அறுந்து போய் விட்டாலோ அல்லது பயனற்றதாகிவிட்டலோ புதிய பூணுலை முறைப்படி அதற்கான சங்கல்பங்கள் மற்றும் மந்திரத்தைக் கூறி மாற்றிக் கொள்ள வேண்டும்.
உபநயனம் ஆன பின்னர் பூணூல் இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு கர்மாவும் உரிய பயனைத் தராது.
Keywords: பூணூற்கலியாணம், பூணூல் கலியாணம், பூணூற்கல்யாணம், பூணூல் கல்யாணம்





Comments
Post a Comment