தமிழ் ஆண்களைப் போல, கேரள ஆண்களைப் போல, வட இந்திய ஆண்களைப் போல தெலுங்கு ஆண்களிடையேயும் வேட்டி கட்டுவதில் சில சில வேறுபாடுகள் உள்ளன.
என்ன தான் எல்லா ஆண்களும் வேட்டி கட்டுவதில் பொதுவான சில முறைகளை கொண்டிருந்தாலும், ஒரு சில விடையங்களை அவர்கள் செய்வதன் மூலம் தம்மை ஏனைய இனங்களைச் சேர்ந்த ஆண்களிடம் இருந்து வேறு படுத்திக் கொள்கிறார்கள்.
கேரள ஆண்கள் எவ்வாறு வேட்டியின் கரையை வெளிக்காட்டும்(Highlight) வகையில் வேட்டியை அணிவார்களோ, அது போலவே ஆந்திர ஆண்கள் வேட்டியில் கொய்யம்/கொசுவம் வைத்து, இடுப்பு பகுதியில் உள்ள வேட்டியின் கரையை இடையில் அமையும் வகையில் மடித்து வெளிக்காட்டி வித்தியாசமான தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.
சேலையில் கொய்யம்(Koijam)/கொசுவம்(Kosuvam) வைப்பது போல ஆண்களும் வேட்டியில் கொய்யம்/கொசுவம் வைப்பது உண்டு. கொசுவம் என்பது தமிழ்ப் பெண்கள் புடவை அணியும்போது, இடுப்பில் சுருக்கச் சுருக்கமாக மடித்துச் சொருகும் பாரம்பரிய முறை ஆகும். இது புடவையின் முன் பகுதியிலோ (முன் கொசுவம்) அல்லது பின்பகுதியிலோ (பின் கொசுவம்) விசிறி போல மடித்துக் கட்டப்படுகிறது.
தெலுங்கு ஆண்கள் மாத்திரம் தான் இவ்வாறு வேட்டி கட்ட முடியுமா? நிச்சயமாக இல்லை. நீங்கள் விரும்பினால் கூட இவ்வாறு வித்தியாசமாக வேட்டி கட்டி, ஏனையவர்களைக் காட்டிலும் தனியாக உங்களை வெளிக்காட்டலாம்.
























Comments
Post a Comment