ஆண்கள் வயதுக்கு வரும் போது ஏற்படும் முதன்மையான மாற்றங்களில் ஒன்றாக அவர்களின் ஆண்குறியின் மொட்டை, அதன் முன் தோலை பின்னால் நகர்த்தி வெளியே எடுக்கக் கூடிய இயலுமையை கருதலாம்.
சில ஆண்களுக்கு ஆண்குறி விறைப்படையும் போதெல்லாம் அவர்களின் ஆண்குறியின் மொட்டு வெளியே வந்து தங்கி விடும். ஆண்குறி விறைப்படைந்திருக்கும் போது கிட்டத்தட்ட சுன்னத் செய்த சுன்னி போன்ற தோற்றம் அவர்களுக்கு இயற்கையாகவே கிடைக்கும். அதற்குக் காரணம் அவர்களின் ஆண்குறியின் முன் தோல் குறுகியதாக இருப்பதனால் ஆகும்.
சில ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் முன் தோல் மாத்திரம் தும்பிக்கை போல நீளமாக இருக்கும். அதனை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து சுத்தம் செய்வதே போராட்டமாக இருக்கும். அவர்கள் ஒரு வைத்தியரை சந்தித்து முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ ஆண்குறியின் முன் தோலை சுன்னத் செய்து நீக்குவது சிறந்தது.
அதே போல சில ஆண்களால், முன் தோல் குறுக்கம் காரணமாக அவர்களின் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியாத நிலை வயதுக்கு வந்த பிறகும் இருக்கும். பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அவர்களும் வைத்திய ஆலோசனை பெற்று சுன்னத் செய்து கொள்ள வேண்டும்.
ஆண்கள் தூங்கும் போது, குறிப்பாக அதிகாலை வேளையில் அவர்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிகமாக இருக்கும். அதனை மூளை, உடலுறவுக்கான அழைப்பாக தவறாக புரிந்து கொண்டு ஆயுதத்தை ஆயத்தம் செய்ய ஆரம்பிக்கும். இதனையே எழுந்தமான அதிகாலை வேளை ஆண்குறி விறைப்பு ஏன்கிறார்கள். இது இயற்கையானது, இயல்பானது.
Morning Wood எனப்படும், அதிகாலை வேளை ஆண்குறி எழுச்சி ஏற்பட்ட ஆண்கள் நன்றாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டு மூச்சு பயிற்சி செய்வதன் மூலமும், கவனத்தை வேறு திசை நோக்கி திருப்புவதன் மூலமும் அது மேலும் விறைப்படைவதை கட்டுப்படுத்தலாம்.
உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆணுக்கு ஆண்குறி விறைப்படைந்திருக்கும் போது அவனால் இலகுவாக சிறுநீர் கழிக்க முடியாது.
சில ஆண்களுக்கு, அவர்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன்(Testosterone) எனப்படும் ஆண்களின் பாலியல் ஹோர்மோனின் உற்பத்தி அதிகமாக இருக்கும் போது, அதிகாலை வேளையில் ஆண்குறி எழுந்தமானதாக விறைப்படையும் போது, ஆண்குறியின் மொட்டு தானாகவே முன் தோலுக்கு வெளியே வந்து தங்கியிருப்பது உண்டு. இது இயல்பான விடையமாகும். இதனை மொட்டு மலர்வதுடன் ஒப்பிடலாம். ஆண்களின் ஆண்குறியின் மொட்டு தாமாகவே அதன் முன் தோலிற்குள் இருந்து வெளியே வருவதை ஆண்களால் உணர முடியும்.
இவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக: ஆண்குறியின் மொட்டு அதிகல் உலர்ந்திருந்தல், ஆண்குறியின் முன் தோல் முழுமையாக/முறையாக ஆண்குறியின் மொட்டை மூடியிருக்காமை, அல்லது உடல் தேவையாக(கொஞ்சம் மூச்சு வாங்கலாம்/காத்தோட்டமா இருக்கலாம்னு) கூட இருக்கலாம்.
ஆண்கள் அசெளகரியமாக உணரும் வரை, அவ்வாறு வெளியே வந்து தங்கியிருக்கும், அல்லது மலர்ந்த மொட்டை, வெளியவே தங்கியிருக்க வைப்பது தான் சிறந்து. நீங்கள் அதனை மீண்டும் முன் தோலால் மூட முற்பட்டால், சில வேளைகளில் அது ஒரு ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற போராட்டமாக அமையலாம். நீங்கள் ஆண்குறியின் மொட்டை, அதன் முன் தோலை முன்னால் தள்ளி மூட, மூட அது மீண்டும் வெளியே வரலாம்.
ஆண்குறியின் மொட்டு வெளியே இருந்தது போது என்று நீங்கள் உணரும் வரை, அதனை வெளியவே தங்கியிருக்க வைப்பது தான் சிறந்தது.














Comments
Post a Comment