கடுக்கண் என்பது பொதுவாக ஆண்கள் தங்கள் காதுகளில் அணியும் ஒருவகை பாரம்பரியமான சிறிய காதணி அல்லது ஆபரணத்தைக் குறிக்கும். தமிழர் மரபில் பெண்கள் காதில் அணியும் அணிகலனை தோடு எனக் கூறுவது மாதிரி ஆண்கள் தம் காதுகளில் அணிவதை கடுக்கண் என அழைத்தனர்.
ஆண்கள் ஒரு காதில் மாத்திரமே பொதுவாக கடுக்கண் தோடு அணிவர். அது பொதுவாக இடது காதாக இருக்கும். ஆண்கள் அணியும் கடுக்கண் தோடில் கல்லு பதிப்பது விருப்பத்திற்கு உரியது ஆகும். கல்லு பதித்த கடுக்கண் தோடு அணியும் போது அது வெளிச்சத்திற்கு மினுங்கி அதனை பலரை கவனிக்க வைக்கும்.
தற்காலத்தில் கடுக்கண் அணிந்தால் பார்க்க ரவுடி பசங்க போல இருப்பார்கள் என்ற எண்ணம் நமது சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மையல்ல.
இது காலங்காலமாக தமிழர்களின் கலாச்சாரத்தில் ஆண்களால் அணியப்பட்டு வருகிறது. மன்னர்கள், சித்தர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் பலர் கடுக்கண் அணிந்திருந்ததாக இலக்கிய மற்றும் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. ஆண்கள் கடுக்கண் அணிவது முகத்திற்கு ஒரு கம்பீரமான அழகைத் தரும் என்று நம்பப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய மருத்துவத்தில், காது குத்துவது உடலின் பல நரம்புகளைத் தூண்டி ஆரோக்கியத்தைப் பேண உதவும் என்றும் கருதப்படுகிறது.
பொதுவாக காதில் மூளையுடன் தொடர்புடைய ஒரு Pressure Point உள்ளது. ஆண்கள் கடுக்கண் அணிவதன் மூலம் அது தூண்டப்பட்டு உங்களுக்கு அதிகம் தெளிவான சிந்தனை(Clarity) பிறக்கும். அதே நேரம் உங்கள் கவனச்சிதறலை(Focus) குறைக்க உதவும். உடலில் உள்ள அழுத்தப் புள்ளிகளைத் தூண்டி(Pressure Point), வலி மற்றும் நோய்களைக் குணப்படுத்தும் முறை "அழுத்தப் புள்ளி மருத்துவம்" அல்லது "குத்தூசி மருத்துவம்" என்று அழைக்கப்படுகிறது.
Read More: ஆண்கள் ஏன் வலது காதில் தோடு அணியக் கூடாது? வளையம் போன்ற தோடு அணிந்தால் உங்களை மற்றவர்கள் வானவில் அன்பர் என இனங்காணலாம்.











Comments
Post a Comment