அருணாக்கொடி, அரணா கயிறு, அரைஞாண் கயிறு என ஆண்களின் இடுப்பில் அணியும் கறுப்பு நிற கயிற்றை பல்வேறு வட்டார வழக்குகளில் அழைப்பர். இதனை கயிற்றில் மாத்திரம் அல்ல, வெள்ளியிலும் செய்து அணியலாம்.
நீங்கள் அருணாக்கயிற்றை கயிற்றில் அணிந்தாலும், அல்லது வெள்ளியில் செய்து அணிந்தாலும் அதனை தளர்வாக அணியக் கூடாது. உடலுடன் ஒட்டியவாறு இருக்கும் வகையில் அவற்றை அணிய வேண்டும்.
கருப்பு கயிற்றை இடுப்பில் கட்டுவதாக இருந்தால் அதன் நீளத்தை இடுப்பு அளவுக்கு ஏற்றால் போல மாற்றியமைக்கலாம். ஆனால் வெள்ளியில் செய்த அருணாக்கொடியை இடுப்பு அளவுக்கு ஏற்றால் போல மாற்றியமைத்து அதன் எஸ்-வடிவ கொக்கியை(S-Hook Clasp) கொளுவ முடியாது.
பசங்க வளரும் போது அவர்களின் இடுப்பளவு மாறும் என்பதால் சிறு வயதில் இருந்தே சிலர் கயிற்றின் உதவியுடன் வெள்ளி அருணாக்கொடியை அணிவிக்கிறார்கள்.
அதன் காரணமாகவே வெள்ளி அருணாக்கொடி அணியும் ஆண்கள் அவற்றுடன் சாதாரண கருப்பு அருணாக்கொடியையும் இணைத்து அணிகிறார்கள். இதன் மூலம் இடுப்பு அளவு மாறும் போதெல்லாம் வெள்ளி அருணாக்கொடியை கழட்டி, மீண்டும் உடலுடன் ஒட்டியிருக்கும் வகையில் அணியக் கூடியதாக இருக்கும்.
வெள்ளி அருணாக்கொடி உடலுடன் ஒட்டியிருக்கும் போது தான் உடல் சூட்டை அது சம நிலை செய்யும். அதே நேரம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி, உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த உதவும்.







Comments
Post a Comment