ஆண்கள் இரவில் தூங்கும் போது அணிந்திருப்பதற்கு முனைகள் மூட்டி துணியால ஆன உருளை/Tube போன்று இணைக்கப்பட்ட லுங்கி, அதாவது சாரமே சிறந்தது. முனைகள் மூட்டாத லுங்கி, வேட்டி போன்றவற்றை ஆண்களால் அணிந்து தூங்க முடிந்தாலும் அவை விலகி உங்கள் தொடைகள், அந்தரங்கம் வெளித்தெரியும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் சாரம் உங்களைச் சூழ 360 பாகைக்கு மறைப்பை உருவாக்கி இருக்கும்.
ஆண்கள் சாரம், லுங்கி, வேட்டி போன்றவற்றை அணிந்து தூங்கும் போது அவற்றின் கட்டினை, உங்கள் இடுப்பில் இருக்கும் அரைஞாண் கயிற்றை அதன் மேல் விட்டு இறுக்க வேண்டும். இல்லாவிட்டால், தூங்கும் போது உங்களை அறியாமல் கட்டு லூசாகி அவிழலாம்.
லுங்கி, வேட்டி கட்டிக் கொண்டு தூங்கும் போது ஏன் ஆண்கள் ஜட்டி போட்டிருக்க வேண்டும்?
இரவு லுங்கி, சாரம், வேட்டி அணிந்து தூங்கும் போது உங்களை அறியாமல் தூக்கத்தில் உருண்டு, பிரண்டு படுக்கும் போது அவற்றின் கட்டுகள் அவிழ்ந்தால், மானத்தை காக்க ஆண்கள் அவசியம் உள்ளே ஜட்டி அணிந்திருப்பது நல்லது.



















Comments
Post a Comment