ஆண்டியும் அரசனாவான் என்று சொல்லி கேட்டிருப்பீர்கள். என்னது ஆண்டியா? இது இங்கிலிஸ் "ஆண்டி" இல்லை. தமிழ் ஆண்டி! ‘ஆண்டி’ எனும் சொல் சமயத்துறவிகளைக் குறிக்கக் கூடியது.
தமிழ்நாட்டு வரலாற்றுச் சூழலில், முதற்கண் சமண, பெளத்த மரபுகளுக்கு உரியதாக இருந்த இந்தச் சொல் வழக்கு, பின்னர் வைதிக மரபுகளுக்கும் உரியதாகப் பெருவழக்கு பெற்றிருக்கின்றது.
தமிழ்ச் சூழலைப் பொருத்தவரை வைதிகத் துறவிகளும் ஆசீவகத் துறவிகளும் தலைமயிரைக் கொண்ட ஆண்டிகளாக இருந்திருக்கின்றனர்.
இவர்களுக்கு மாற்றாக இருந்த சமண, பெளத்தத் துறவிகள் தலைமயிரற்று இருந்திருக்கின்றனர். இந்நிலையில், வைதிக, ஆசீவகத் துறவிகளையே தமிழ்ச் சமூகம் மயிராண்டிகள் (மயிரை உடைய ஆண்டிகள்) என்று குறித்திருக்க வேண்டும்.
மயிராண்டி எனும் இச்சொல்லாடலை வசைச்சொல்லாகச் சமணர்களும் பெளத்தர்களும் பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. அதற்கான தொனியே இன்றும் சமூக வழக்கில் நின்று நிலவுகிறது.
காலம் செல்லச் செல்ல, இச்சொல்லின் வரலாற்றுப் பின்னணி மறைந்து, கோபத்திலோ அல்லது ஏளனம் செய்யும்போதோ ஒருவரைக் குறைவாக மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு இழிசொல்லாக இது மாறியுள்ளது. இது தலைமயிர் அல்லது உடலிலுள்ள உரோமங்களைக் குறிக்கும் 'மயிர்' மற்றும் துறவிகளைக் குறிக்கும் 'ஆண்டி' ஆகிய இரு சொற்களின் இணைப்பிலிருந்து உருவானது.
ஆமா.. இவரு பெரிய "மயிராண்டி" என்று சில அண்களை பார்த்து வாக்குவாதத்தில் ஈடுபடும்/வாய்ச்சண்டையில் ஈடுபடும் ஆண்கள் கூறுவதை பார்த்திருப்பீர்கள். இங்கு மயிராண்டி என்பதற்கு "பெரியவர்/அறிவானவர்/இவர் சொன்னால் சரியாக இருக்கும்" என்று அர்த்தம் கொடுக்கப்படுகிறது.
ஆமாடா.. நான் பெரிய மயிராண்டி தான் என்று எல்லா ஆண்களாலும் கெத்தாக கூற முடியாது. அதற்குக் காரணம் எல்லா அண்களுக்கும் அவர்களின் உடலில் முடி(Body Hair) காடு போல வளர்வதில்லை. உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியானது அண்களின் ஆண்மையின் அடையாளமாக கருதப்படுகிறது.
ஆண்களுக்கான பாலியல் ஹோர்மோனான Testosterone உடலில் அதிகம் சுரக்கும் அண்களுக்கு மலைக்காடுகள் போல உடல் முழுவதும் அதிகம் மயிர் வளர்ச்சி இருக்குமாம். அவ்வாறான ஆண்கள் தம்மைத் தாமே மயிராண்டிகள் என அழைத்துக் கொள்வது ஒருவகையில் தற்பெருமையடைய வேண்டிய விடையம் தான்.
Keywords: Mayirandi, Mayiraandi













Comments
Post a Comment