"ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்" என்று "மின்சார பூவே" எனும் படையப்பா(1999) தமிழ் திரைப்படப் பாடலில், ஒரு வரி இடம் பெற்றிருக்கும். அந்த வரிகளை ரசிக்காத ஆண்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு அது ஆண்களின் ஆண்மையையே கேள்வி கேட்கும் வகையில் அமைந்திருக்கும்.
இப்பாடலில் காதலி தன் காதலனிடம், தான் அவனிடம் கண்ட உண்மையான அன்பையும், அவனுடைய சிறந்த குணங்களையும் வியந்து பாடுகிறாள். இங்கு இலக்கணம் என்பது ஒழுக்கம், பண்பு, மற்றும் ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குரிய வரையறைகளைக் குறிக்கிறது.
"ஒரு ஆண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சான்றோர்களால் எழுதப்பட்ட(அல்லது வகுக்கப்பட்ட) அத்தனை நற்பண்புகளையும், கட்டுப்பாடுகளையும் உன்னிடத்தில் நான் காண்கிறேன்" என்பது இதன் நேரடி அர்த்தமாகும்.
ஒரு ஆண் எப்படி இருப்பான் என்று சங்க கால இலக்கியங்கள் வர்ணிக்கின்றன?
சங்ககால இலக்கியங்களில் ஆண்கள்(ஆடவர்கள்) வீரம், கொடை, ஒழுக்கம், மற்றும் குடும்பப் பொறுப்பு ஆகிய நற்பண்புகளின் முழுமையான உருவமாக வர்ணிக்கப்பட்டுள்ளனர். இலக்கியங்களில் ஆண்கள் தலைவன், வீரன், தலைமகன் என்ற பல்வேறு கோணங்களில் விவரிக்கப்படுகின்றனர்.
ஒரு ஆண் தனக்கென வாழாமல், பிறர் பொருட்டு போர்க்களம் புகுவதையும், தன்மானத்திற்காக உயிரையும் தருவதையும் முதன்மைக் குணமாகக் கொண்டுள்ளான். போரில் புறமுதுகிட்டு ஓடுவதை விட மரணமடைவதையே மேன்மையாகக் கருதினான்.
காதலில் சிறந்தவனாக, தலைவியின் பிரிவுத் துயரைப் புரிந்து கொள்பவனாகவும், அவளைப் பாதுகாப்பவனாகவும் விளங்குகிறான்.
பிறர் பசி அறிந்து தான் ஈட்டிய பொருளைக் கேட்டு வருவோர்க்கு வரையாது(அளவின்றி, தடையின்றி அல்லது கணக்கின்றி வாரி வழங்குதல்) வழங்கும் வள்ளல் தன்மையுடையவனாக ஒரு ஆண் இருக்க வேண்டும் என இலக்கியங்கள் கூறுகின்றன.
ஆண்மையுள்ள ஆண்கள் வலிய தோள்களும், அகன்ற மார்பும் உடையவர்களாகவும், வீரம் செறிந்த உடலமைப்பைக் கொண்டவர்களாகவும் வர்ணிக்கப்படுகின்றனர்.
இந்த நவீன உலகில் ஆண்மையுள்ள ஆண் எப்படி இருக்க வேண்டும்? கிடைத்த ஓட்டையை ஆண்டு அனுபவிக்க வேண்டும். கன்னி கழியாத பெண்களுக்காக காத்திருக்கக் கூடாது. வாய்ப்புகள் அமைந்தால் சக ஆண்களுடன் படுக்கவும் துணிய வேண்டும்.




















Comments
Post a Comment