ஆண்கள் வேட்டி கட்டிய பின்னரும், லுங்கி/சாரம் கட்டிய பின்னரும் அவற்றின் இடுப்பு பகுதியை கீழ் நோக்கி உருட்டி விடுவது அவற்றின் கட்டை இறுக்கமாக்குவதற்கு ஆகும். அவ்வாறு மடித்து விடுவது கிட்டத்தட்ட நீளமான சட்டையின் கைகளை மடித்து விடுவது போன்றதாகும்.
இடுப்பில் அரைஞாண் கயிறு இருக்கும் ஆண்கள், அந்த கயிற்றை லுங்கி/சாரம், வேட்டியின் கட்டின் மீது விட்டு, இவ்வாறு கீழ் நோக்கி உருட்டி மடித்து வேட்டியின் கட்டினை மேலும் உறுதியாக்குவர்.
வேட்டி, லுங்கி/சாரம் போன்றவற்றை சாதரணமாக சொருகி அணிந்தால் நடக்கும் போது கால்கள் இடறுண்டு, காலில் மிதி பட்டு அவற்றின் கட்டுகள் சீக்கிரம் அவிழலாம்.
இவ்வாறு இடுப்பு பகுதியில் உருட்டி மடிப்பதன் மூலம் மேல கூறியது போன்ற பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.





Comments
Post a Comment