ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது குழந்தை பெற்றுக் கொள்வதற்காக தானா? நிச்சயமாக குழந்தை பெற்றுக் கொள்வது அதன் பிரதான நோக்கங்களில் ஒன்றாக இருந்தாலும், அது மாத்திரம் தான் காரணமா? அப்படியென்றால் திருமணம் செய்து கொண்ட பின்னர் ஓரிரு முறை மாத்திரம் தான் கணவனும் மனைவியும் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக உடலுறவு கொள்வார்களா?
நிச்சயமாக இல்லை. தாம்பத்திய உறவில் ஈடுபடுவதன் நோக்கம் வெறுமனே குழந்தை பெற்றுக் கொள்வது அல்ல. தன் குடும்பத்தை திட்டமிட்டு அமைக்க விரும்பும் ஆண்கள், தான் எதிர்பார்த்த அளவுக்கு குழந்தைகளை பெற்றுக் கொண்ட பின்னர் அல்லது தான் எதிர்பார்க்கும் காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளும் வரை காண்டம் அணிந்து உடலுறவு கொள்வர்.
ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது ஊர் உலகத்தாரின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டு தமது உடல் பசி/காமப் பசியை தீர்த்துக் கொள்வதற்காகவும் ஆகும்.
அப்படியிருக்கையில் சில மதங்கள் ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதே குழந்தை பெற்றுக் கொள்வதற்காக தான். அதற்கே கடவுள் அனுமதி கொடுத்துள்ளார். அவ்வாறான நிலையில் ஆம்பளையும் ஆம்பளையும், அல்லது பொம்பளையும் பொம்பளையும் உடலுறவு கொள்வது இயற்கைக்கு மாறானது. இயற்கை பொறிமுறையை மாற்றும் செயல் என ரீல் சுற்றுவது எந்த விதத்தில் நியாமானது?

Comments
Post a Comment