நேர்த்தியாக வேட்டி, லுங்கி, சாரம் கட்டுவதற்கு ஏன் அண்களுக்கு முன் அனுபவம் அவசியம்? பாரம்பரிய ஆடைகளை அணியும் போது ஒரு "Perfection" யை உங்கள் தோற்றத்தில் எதிர்ப்பார்க்கிறீர்களா? ஒரு ஆண் தனது அன்றாட வாழ்வில் வேட்டி, லுங்கி, சாரம் போன்றவற்றை தினமும் அணிந்து வந்தால் மாத்திரமே அவனால் நேர்த்தியாக அவற்றை அணிய முடியும். அதற்குக் காரணம் அவன் தினமும் அவற்றை அணியும் போது அதில் அவன் இனங்காணும் குறைபாடுகளை அவனுக்கு கிடைக்கும் அனுபவங்களை வைத்து திருத்தக் கூடியதாக இருக்கும்.
முன் அனுபவம் இல்லாமல் புதிதாக வேட்டி, லுங்கி, சாரம் கட்டும் ஆண்யையும், முன் அனுபவத்துடன் வேட்டி, லுங்கி, சாரம் கட்டும் ஆண்யையும் இலகுவாக இனங்காணலாம். எப்போதும் புதிதாக ஒரு விடையத்தை செய்யும் போது, அல்லது கற்றுக் கொள்ளும் போது பல சவால்களை சந்திக்க நேரிடும்.
அதற்காக கட்டாயம் லுங்கி, வேட்டி, சாரம் என அனைத்தையும் தினமும் அணிய வேண்டும் என்றில்லை. அவற்றில் எதையாவது ஒன்றை அணிந்தாலே போதும். லுங்கிக்கும் சாரத்திற்கும் வித்தியாசம் உள்ளது. சாரம் என்பது இரு முனைகளும் மூட்டப்பட்ட லுங்கியாகும். ஆனால் லுங்கிக்கும் வேட்டிக்கும் வித்தியாசம் பெரிதாக இல்லை. அவற்றின் தோற்றம் மாத்திரமே வித்தியாசமாக இருக்கும்.
முன் அனுபவங்களை அனுபவித்து தான் தேடிக் கொள்ள வேண்டும் என்றில்லை. இந்த அனுபவங்களை ஏனைய ஆண்களை பார்த்தும் பெற்றுக் கொள்ளலாம். சில விஷயங்களை நம்ம செய்து பார்த்து அனுபவ ரீதியாக தான் தீர்வு காண வேண்டும் என்றில்லை. மற்றவர்கள் செய்யும் தவறைப் பார்த்துக் கூட நாம் அவற்றை எதிர்காலத்தில் செய்யாது தவிர்த்துக் கொள்ளலாம்.
எமது இணையத்தளங்களில் இது வரை வெளிவந்துள்ள லுங்கி, வேட்டி, சாரம் கட்டுவது தொடர்பான பதிவுகளை தேடிப் படித்து கூட உங்கள் அறிவை பெருக்கிக் கொள்வதுடன், அவற்றில் உள்ள உதாரண படங்கள், வீடியோக்களைப் பார்த்துக் கூட அனுபவத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.


























Comments
Post a Comment