பூப்படைய ஆரம்பித்த நாள் முதல் எல்லா ஆண்களின் உடலிலும் வியர்வை அதிகமாக வெளியேறும். ஆனால் சில ஆண்களுக்கு அணிந்திருக்கும் சட்டை, பனியன், டீ-சேர்ட் முழுமையாக நனையும் அளவுக்கு வியர்ப்பது உண்டு. அதற்கு மருத்துவ காரணங்கள், பரம்பரை அலகுகள், பய உணர்வு போன்றன காரணமாக அமையலாம். நமது கால நிலைக்கு ஏற்றதல்லாத மேலாடைகளை அணிந்தாலும் ஆண்களுக்கு அதிகமாக வியர்க்கும்.
அதிகமாக வியர்க்கும் ஆண்கள் பனியன்(Vest/Undershirt) அணிவது அவர்களின் உடலையும், அன்றாட ஆடையையும் சுத்தமாகவும் கச்சிதமாகவும் வைத்திருக்க மிகவும் அவசியமானது.
உடலின் வெப்பத்தால் வெளியேறும் அதிகப்படியான வியர்வையை பனியன் முழுமையாக உறிஞ்சிவிடுகிறது. இதனால் வியர்வை உங்கள் மேல் சட்டையில்(Shirt) பட்டு, அல்லது டீ-சேர்ட்டில்(T-Shirt) அங்காங்கே ஊறி, அசிங்கமான திட்டுகளாக தெரிவது தவிர்க்கப்படும்.
வியர்வை நீண்ட நேரம் சட்டையில் படிந்தால் பாக்டீரியாக்கள் உருவாகி துர்நாற்றம் வீசும். தரமான காட்டன் பனியன் அணிவது துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும். அதே நேரம் வியர்வையில் ஊறிய சட்டை, பனியன், டீ-சேர்ட் போன்றவற்றை அன்றன்றே துவைத்து காயப் போட வேண்டும். அதன் மூலம் கரும்பேன்/கரும்புள்ளி அல்லது ஒரு வித கறுப்பு நிற புள்ளிகள் போன்ற பங்கசு வளர்ச்சியடைந்து அவற்றின் தோற்றத்தை பாழாக்கி விடும்.
தொடர்ந்து சட்டைகளில் வியர்வை படுவதால் காலப்போக்கில் சட்டையின் நிறம் மங்கிவிடும் அல்லது மஞ்சள் நிற கறைகள் படியும்(குறிப்பாக அக்குள் பகுதியில்). பனியன் இந்த பாதிப்பிலிருந்து வெளிச்சட்டையைப் பாதுகாக்கிறது.
உடலுக்கும் வெளி ஆடைக்கும் இடையே ஒரு மென்மையான அடுக்கு இருப்பதால், சொரசொரப்பான துணிகளால் ஏற்படும் அரிப்பு மற்றும் அசௌகரியத்தைத் தடுக்கலாம்.
அதே நேரம் ஆண்களின் புடைத்த மார்புக் காம்புகள் அவர்கள் அணிந்திருக்கும் சட்டைகளினூடக கூர்மையாக குத்திக் கொண்டு வெளித்தெரிவதை பனியன்கள் தடுக்கும்.
நல்ல காற்றோட்டமான பருத்தி(Cotton) பனியன்கள் உஷ்ணத்தைத் தணித்து, உடலை எப்போதும் உலர்வாக வைத்திருக்க உதவும். நீங்கள் வாங்கும் பனியன்கள் தரமான காட்டன்(Pure Cotton) துணியால் செய்யப்பட்டவையா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இவைதான் வியர்வையை உறிஞ்சுவதில் மிகச்சிறந்தவை.
Keywords: வியர்வையில் நனைந்த சட்டை, டீ-சேர்ட்டில் அங்காங்கே Wet Spots

Comments
Post a Comment