யார் முட்டாள்? சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம் செல்களை(Stem Cells) அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.
அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?
அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில், தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன், அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள், அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள்.
பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும். இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கம் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை என்பதுதான் வருத்தம்.
இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம், அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு "ஸ்டெம்செல் தெரபி" என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர். உண்மையில் இன்று நாம் முட்டாளா? இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா? என்று சிந்தித்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இனியாவது விழிப்போம். நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர் பயன்படுத்திய அதே முறையை தான் இன்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து "ஸ்டெம் செல் தெரபி" என வழங்குகின்றனர். ஸ்டெம் செல் முறையானது, நம் உடலின் எல்லா வகையான நோய்களையும், குறைபாடுகளையும் சரி செய்ய வழி வகுக்கிறது. புற்றநோய் முதல் விந்தணு குறைபாடு வரை இது எல்லாவற்றிருக்கும் நிரந்தர தீர்வை தருகிறதாம்.
Read More: ஆண்கள் தொப்புள் கொடி தவிர்ந்து வேறு எவற்றை தாயத்தாக செய்து அணியலாம்?
Fact Check: பிறந்த குழந்தையின் காய்ந்த தொப்புள் கொடியை (Umbilical Cord Stump) அரைத்து அல்லது தாயத்துக்குள் வைத்து பாதுகாக்கும் வழக்கம் பரவலாக உள்ளது. இந்த தொப்புள் கொடி பவுடரை, குழந்தை வளர்ந்த பிறகு ஏற்படும் கடுமையான நோய் பாதிப்புகளின் போது நீரில் கரைத்துக் கொடுக்கும் நம்பிக்கை பாரம்பரிய மருத்துவத்தில் காணப்படுகிறது. இது பெரும்பாலும் பிற்கால ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்புக்கான ஒரு கலாச்சார நம்பிக்கையாக கருதப்படுகிறது.
தொப்புள் கொடி பாதுகாப்பு: குழந்தை பிறந்த 5 முதல் 15 நாட்களுக்குள் காய்ந்து விழும் தொப்புள் கொடி காய்ந்த பின், அதை நன்கு உலர்த்தி, பொடி செய்து அல்லது தாயத்துக்குள் (Amulet) இட்டு பாதுகாப்பார்கள்.
பயன்பாடு: சில பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, பிற்காலத்தில் ஏற்படும் கொடிய நோய்களுக்கு மருந்தாக இந்தத் தொப்புள் கொடி பவுடரை நீரில் கலந்து கொடுப்பார்கள்.
கலாச்சார முக்கியத்துவம்: இது பிறந்த குழந்தையை நோய்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.
மருத்துவக் குறிப்பு: காய்ந்து விழும் தொப்புள் கொடி முனையை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருக்க வேண்டும், அதே சமயம் அதை வலுக்கட்டாயமாக இழுக்கக்கூடாது.
குறிப்பு: இது ஒரு கலாச்சார மற்றும் பாரம்பரிய நம்பிக்கை சார்ந்த தகவல், இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை அல்ல.
இந்த பழக்கம் உங்கள் குடும்பத்தில் இருந்தால் அவை தொடர்பான அனுபவங்களை Comment பண்ணுங்க.





Comments
Post a Comment