ஆண்கள் வேட்டி வாங்கும் போது வேட்டியின் Border Design யைக் கொண்ட ஒரு சால்வையும் இணைந்தே விற்கப்படுவது உண்டு. வேட்டியின் சால்வையை அங்கவஸ்திரம் என்றும் அழைப்பர். ஆனால் வேட்டி அணியும் போதெல்லாம் ஆண்கள் சால்வை அணிய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
அங்கவஸ்திரம் என்றால் என்ன? அங்கவஸ்திரம் (Angavastra) என்பது தென்னிந்தியாவில் ஆண்கள் தோளில் அணியும் ஒரு நீண்ட மேலாடை அல்லது துண்டு ஆகும். இது பொதுவாக வேட்டி, குர்த்தா அல்லது சட்டையுடன் சேர்த்து, பாரம்பரிய நிகழ்வுகள் மற்றும் கோயில்களுக்குச் செல்லும்போது அணியப்படும். இது அலங்காரமான விளிம்புகளைக் கொண்ட செவ்வக வடிவ துணியாகும்.
சிலர் வேட்டியுடன் வரும் சால்வையை பயன்படுத்தாமல், வேட்டியின் நிறத்தை விட வேறு நிறங்களில், கோயில் நிகழ்வுகளிற்காக விற்கப்படும் விசேட அங்கவஸ்திரங்களையும் பயன்படுத்துவர்.
வேட்டியுடன் வரும் சால்வையை ஆண்கள், சட்டை அணியாமல் வேட்டி கட்டியிருக்கும் போது மார்பை மறைக்க ஒரு போர்வை போல பயன்படுத்துவர். வேட்டியுடன் கீழே குந்தியிருக்கும் போது வேட்டியில் அழுக்கு படாமல் இருக்க, வேட்டியின் மீது, சால்வையை ஒரு துண்டைப் போல சிலர் கட்டுவர்.
வேட்டியின் சால்வையை தலைப்பாகை கட்ட பயன்படுத்துவர். வேட்டியின் சால்வையை மடித்து தோளில் ஒரு துண்டு போல போடலாம். அதே நேரம் வேட்டியின் சால்வையை இடுப்பில் ஒரு Belt போல கட்டி, வேட்டியில் உங்கள் தோற்றத்தை அழகாக்கலாம்.
சிலர் வேட்டியின் சால்வையை செவ்வகமாக மடிக்கும் போது அதனுள் Purse, Phone போன்றவற்றை சுற்றி, அதனை இடுப்பில் Belt போல கட்டுவது உண்டு.
ஆனால் அநேகமான வீடுகளில் வேட்டியுடன் வரும் சால்வை அதிகம் பயன்படுத்தாமல் ஓரமாகவே இருக்கும். சில ஆண்கள் வேட்டியுடன் வரும் சால்வையை குளிக்கும் போது இடுப்பில் கட்டும் துண்டாக பயன்படுத்துவர். இது குற்றாலத்துண்டுக்கு நிகராக இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு ஆண்களின் மானத்தை மறைக்க உதவும்.
இவை குற்றாலத்துண்டை விட சீக்கிரம் ஈரமாகி, உடலுடன் ஒட்டிக் கொள்ளும். உள்ளே ஜட்டி அணியாமல் வேட்டியுடன் வரும் சால்வையை இடுப்பில் கட்டிக் கொண்டு குளித்தால், அது ஈரமானதும் உடலுடன் ஒட்டி, ஒரு பாலாடை போல உங்கள் பாலுறுப்புகளை மறைத்து, உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டி விடும்.
சில ஆண்கள் வேட்டியுடன் வரும் சால்வையை குளித்த பின்னர், ஆடை மாற்ற மறைவாக பயன்படுத்துவர்.

























Comments
Post a Comment