குழந்தை பிறந்த பிறகு தான் ஒரு Gay என ஒப்புக்கொண்ட காதல் கணவன். பிரிவதற்கு பதில் ஒரே வீட்டில் வாழ முடிவு எடுத்ததாக கூறி ஆச்சரியப்படுத்திய பெண். வீட்டின் கீழ் தளத்தில் கணவரும் அவரின் Gay பார்ட்னரும், மேலே தானும் தன் மகனும் வாழ்வதாக அவர் தெரிவித்தது இணையத்தை பற்றி எரிய வைத்துள்ளது.
திருமணத்திற்கு முன்பே உண்மையை சொல்லாமல், ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக ஒரு குரூப்பும், சண்டை போட்டு பிரிவதை விட குழந்தையின் எதிர்காலத்திற்காக மெச்சூரிட்டியோடு இந்த முடிவை எடுத்தது நல்லது என இன்னொரு குரூப்பும் முட்டி மோதி வருகின்றனர்.
இந்த செய்தியை தந்தி டிவி வெளியிட்டதில் இருந்து பலர் இது தொடர்பில் மாற்றுக் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இல்லை புரியலை. அவன் மூலமாக குழந்தை பிறந்த பிறகு எப்படி அவன் ஓரினச்சேர்க்கையாளன்(தன்னினச்சேர்க்கையாளன்) என சொல்ல முடியும்? எனக்கு தெரிந்து அவனுக்கு நல்ல மருத்துவரிடம் காட்டி கவுன்சிலிங் தான் குடுக்கணும். அதைவிட்டு இதெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்று பலர் தமது சந்தேகங்களை வெளியிட்டிருந்தனர்.
ஆண் தன்னினச்சேர்க்கையாளர்கள் ஒன்றும் ஆண்மையற்றவர்கள் அல்ல. அவர்களால் தாராளமாக ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியும். ஆனால் அவர்களால் இயல்பாக ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள முடியாது. அதற்குக் காரணம், பெண்களைப் பார்த்தால் அவர்களுக்கு மூடாகாது. ஆண்குறி விறைக்காது. அதற்காக அவர்கள் ஆண்மையற்றவர்கள் அல்ல. பெண்களுக்கு பதிலாக ஆண்களைப் பார்த்தால், கடப்பாரை போல ஆண்குறி நன்கு புடைத்தெழும்.
தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களிடம் இரண்டு பிரிவினர் உள்ளனர். அவை Gay, Bisexual ஆண்கள் ஆகும். இதில் Gay ஆண்களால் ஒரு பெண்ணின் பெண்குறியினுள் தமது ஆண்குறியை நுழைக்க முடியாது, அல்லது மிகவும் கஷ்டம் எனலாம். அவர்களுக்கு பெண்களை நிர்வாணமாக பார்த்தால் ஆண்குறி விறைப்படையாது. விறைப்படைந்தால் தானே உள்ளே சொருக முடியும்?
ஆனால் Bisexual ஆண்கள் அப்படியல்ல. அவர்களால் ஆம்பள கூடவும் படுக்க முடியும், பொம்பள கூடவும் படுக்க முடியும். இவர்களைத்தான் இந்த சமூகம் இரண்டும் கெட்டான் என்கிறதோ?
அது எதுவாக இருந்தாலும் Gay ஆண்கள் கூட கண்களை மூடிக் கொண்டு, அல்லது இருட்டில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டு ஊர் வாயை மூடுவதற்காக குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.
சிலர் தன்னினச்சேர்க்கையாளர்களை(Gay, Bisexual, Lesbians) மூன்றாம் பாலினத்தவர்(Transgender) என குழப்பிக் கொள்கின்றனர். இவர்கள் திருநங்கையோ, திருநம்பியோ அல்ல. இவர்களும் சாதாரண ஆண்கள் தான். ஆனால் இவர்களின் பாலீர்ப்பு சக ஆண்கள் மீது தான் இருக்கும்.
இப்போ பிரச்சனை என்னவென்றால், கணவனை அவனோட Gay பாட்னருடன் வீட்டின் கீழ் தளத்தில் சேர்ந்து வாழ அனுமதித்தது ஆகும். அப்போ மனைவி காலம் பூராகவும் தனியாக, அவங்க குழந்தைக்காக வாழப் போறாங்களா, அல்லது அவன் ஒரு Gay ஆணாக இல்லாமல், Bisexual ஆணாக இருந்தால் மேலேயும் கீழேயும் மாறி மாறி வாழ நிர்பந்தித்திருக்கிறார்களா?
நாட்டில் ஆண்களுக்கா பஞ்சம், அவனை விவாகரத்து செய்து விட்டு, ஒரு Straight ஆண்யை திருமணம் செய்வது தான் சிறந்தது. சிலர் இது ஒரு போலி செய்தி, விசாரித்து பார்த்தால் இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது. தன்னினச்சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட போல செய்தி என்கிறார்கள். வாய்ப்பு இருக்கு ராஜா!
ஊர் வாயை அடைக்க, குடும்பத்தின் கட்டாயத்தின் பேரில் ஒரு பெண்ணை திருமணம் செய்ய Gay/Bisexual ஆண்களை அவர்களின் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தினால் ஒரு Lesbian பெண்ணை திருமணம் செய்யவும். ஊருக்காக மாத்திரம் கல்யாணம். அதன் மூலம் உங்களாலும் அந்த Lesbian பெண்ணாலும் சிறப்பான ஒரு வானவில் வாழ்க்கையை வாழக் கூடியதாக இருக்கும்.








Comments
Post a Comment