வயசுப் பசங்க கையடிப்பதை நிறுத்துவது எப்படி? கையடிப்பது இயல்பானது தான் என்று சிலர் மீண்டும், மீண்டும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை தான். ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல சுய இன்பம் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாகும் அளவுக்கு டெய்லி கை அடிப்பது தவறாகும்.
ஆண்கள் சுய இன்பம் செய்வது, பசிக்கும் போது உணவு உண்பதைப் போன்று தானாம். அடத் தெய்வங்களா! சாப்பாடு சாப்பிடலனா செத்துப்போயிருவீங்க டா.. ஆனால் கையடிக்கலனா ஒன்றும் சாகலாம் மாட்டீங்கடா!! அதனால கைய வைச்சுகிட்டு சும்மா இருக்க.
நீங்கள் சுய இன்பம் செய்வதை எப்படி நிறுத்துகிறீர்கள் என்பதை Comment பண்ணுங்க.
கையடிப்பதை நிறுத்திய அண்ணன் ஒருவரின் நீண்ட கடிதம்
நானும் உங்களைப் போல மனம் போனப் போக்கில் கையடித்து கொண்டிருந்தவன் தான். ஆனால் இந்த பிட்டுப்படம் பார்ப்பது, கையடிப்பது, அந்த சுகத்திற்காக ஏங்கி அடிமையாக இருந்ததில் இருந்தும், அதனால் என்னுள் ஏற்பட்ட பக்க விளைவுகளில் இருந்தும் விடுபட துவங்கிய போது தான், இந்த பழக்கம் எவ்வளவு தீவிரமான பிரச்சனைகளை, மாற்றங்களை என்னுள் ஏற்படுத்தி இருந்தது என்பதை உணர முடிந்தது.
வாரம் ஒருமுறை அல்லது சில நாட்களுக்கு கை அடிக்காமல் இருந்து விட்டு பின்பு சேர்த்து வைத்து அடிப்பவராக நீங்கள் இருந்தால், அதுவும் அறைகுறையான ஒரு முயற்சி தான். சொல்லி தான் ஆக வேண்டும் நீங்களும் பாவம் தான்.
இதை விளையாட்டாக எடுத்து கொள்ளாதீர்கள்.இதை எவ்வளவு தீவிரமாக எடுத்து கொள்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் நீங்கள் உங்கள் உண்மையான வாழ்க்கையை நெருங்கி செல்வீர்கள். இந்த பழக்கங்கள் தான் உங்களை பல ஆக்கப்பூர்வமான செயல்களில் இருந்து உங்களை விலக்கி வைத்திருக்கிறது.
கண்டிப்பாக இது சாதாரணமாக எல்லோரும் செய்யும் செயல் தானே என்று தோன்றும், ஆனால் இப்படியே இந்த பழக்கத்தோடு இன்னும் ஒன்று, இரண்டு வருடங்கள் நீங்கள் வாழ்ந்தால் உங்கள் வாழ்க்கையைப் பற்றி நினைத்து பாருங்கள்.
இப்பொழுது இருப்பதை போன்று இல்லாமல் இருக்க எதாவது நீங்கள் செய்து தான் ஆக வேண்டும். அதனால் தான் கூறுகிறேன். கண்டிப்பாக இந்த பழக்கத்தில் இருந்து நீங்கள் வெளியேறும் முயற்சிகளை எப்பாடுப் பட்டேனும் ஆரம்பியுங்கள்.
கையடிக்காமல், குறிப்பிட்ட நாட்களை முயற்சி செய்து, நீங்கள் கடந்து வந்த பிறகு, கையடிக்க தூண்டும் விதமான எண்ணங்கள் குறைவதும், சுகத்திற்கான ஏக்கமும் கட்டாயமில்லாதது ஆகிவிடும்(நான் 25 நாட்களுக்கு பிறகு இப்படி உணர்ந்தேன்).
எப்படியும் தூண்டுதல்கள் வரத் தான் செய்யும், ஆனால் நீங்கள் அதை எளிதாக கடந்து செல்பவராக மாறி இருப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் இந்த சிற்றின்ப பழக்கத்தினால் ஏற்பட்ட தீய விளைவுகளை மீண்டும் ஏற்படுத்தி கொள்ள அப்பொழுது விரும்ப மாட்டீர்கள். உங்கள் உண்மையான வாழ்க்கையை வாழ துவங்கி இருப்பீர்கள்.
பாம்பின் தலையை அதன் வால் பின் தொடர்வது போல, காம எண்ணங்களும் கண்டிப்பாக உங்களை தூண்டத் தான் செய்யும். அதனால் அந்த எண்ணங்களை கவனமாக கையாளுங்கள்.
மது குடிப்பதிலிருந்து விடுபட விரும்பவன் மதுபான கடைக்கு அருகே வீடு வைத்திருக்க கூடாது. நீங்களும் உங்களை கையடிக்க தூண்டுபவைகளை உங்களிடமிருந்து சிறிது காலத்திற்கு தள்ளி வையுங்கள்.
உங்களுக்கு இதன் தீவிரத்தைப் புரிய வைக்க தான் விரும்புகிறேன். வெளியே செல்லுங்கள், உலகத்துடன் இணையுங்கள்.
Read More: ஆண்களுக்கான சுய இன்ப ஒழுக்கம்




Comments
Post a Comment