உள்ளே இருப்பதை எளிதில் வெளியே காட்டக் கூடிய கண்ணாடி போன்ற(Transparent), மெல்லிய துணிகளில் உருவாக்கப்பட்ட வெள்ளை நிற வேட்டிகளை ஆண்கள் ஏன் அணிவதை தவிர்க்க வேண்டும்?
அவை கண்ணாடி போன்று உள்ளே இருப்பதை அப்பட்டமாக வெளித்தெரியச் செய்வதனால், அவற்றை ஆண்கள், குறிப்பாக வயது வந்த ஆண்கள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

வட இந்திய ஆண்கள் வெள்ளை நிற மெல்லிய துணிகளினால் ஆன எட்டு முழ வேட்டியை தோதி(பேண்ட் போன்று வேட்டி அணிதல்) அணிய பயன்படுத்துவர். அவர்கள் தென்னிந்திய ஆண்கள் போன்று இந்த வகை வேட்டிகளை அணிவதில் பிரச்சனைகளை சந்திப்பது குறைவாகும். அதற்குக் காரணம் அவர்கள் அந்தரங்கப் பகுதிகளை மறைக்கும் வகையில் வேட்டியில் பல அடுக்குகளை(Pleats) உருவாக்குவதனால் ஆகும்.
பொதுவாக ஆண்கள் வெள்ளை நிற வேட்டிகள் அணியும் போது அவர்களின் தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் அல்லது சாம்பல் நிறத்தில் ஜட்டியை தெரிவு செய்து அணிவதன் மூலம், வேட்டியினூடாக ஜட்டியின் நிறம், ஜட்டியின் வடிவம் அப்பட்டமாக வெளித்தெரிவதை தவிர்க்கலாம்.
இவ்வாறான வேட்டிகள் பொதுவாக நீரில் மூன்று முறை மூழ்கி குளிக்கும் இறந்த மூதாதையர்களுக்காக செய்யப்படும் இந்து மத சிரார்த்த சடங்குகளின் போது, அணிந்திருக்கும் வேட்டியை, ஜட்டியை கழட்டி அந்த நீரிலேயே விடும் சடங்குகளை செய்யும் போதே அதிகம் பயன்படுத்துவர்.
பொதுவாகவே வேட்டி அணிந்து நீராடும் போது, ஈரமான வேட்டி உடலுடன் ஒட்டி, உடலின் அமைப்பையும் அந்தரங்கத்தின் அமைப்பையும் அப்பட்டமாக வெளிக்காட்டும். அவ்வாறான நிலையில் இவ்வாறான மெல்லிய வேட்டிகளை அணிந்து இடுப்பளவு தண்ணீரில், நீர் நிலைகளில் இறங்குவது பொது இடங்களில் உங்களை அம்மணமாக நிற்க வைக்கும் செயலாகும்.
Comments
Post a Comment