இரவு தூங்கும் போது லுங்கி, சாரம்,வேட்டி கட்டிக் கொண்டு, உள்ளே ஜட்டி கூட போடாமல் தூங்கும் ஆண்கள் அவதானமாக தூங்க வேண்டும்.
நீங்கள் தூங்கும் போது உங்களை அறியாமல் செய்யும் உடல் அசைவுகளால், உதாரணமாக திரும்பிப் படுத்தல், உருண்டு புரண்டு உருளுதல், புரளுதல் போன்ற அசைவுகளின் காரணமாக ஆண்களின் இடுப்பில் இருக்கும் லுங்கியின் கட்டு அவிழலாம். அவ்வாறு அவிழ்ந்த லுங்கியானது கொஞ்சம் கொஞ்சமாக உங்களை முழு நிர்வாணமாக தூங்க வைக்கலாம்.
வயசுப் பசங்க லுங்கி அணிவதே லுங்கி என்னும் திரைச்சீலையின் மறைவில் அம்மணமாக வாழ்வதற்கே ஆகும். ஆண்கள் லுங்கி அணிந்து தூங்குவது கிட்டத்தட்ட நிர்வாணமாக தூங்குவதற்கு சமம். ஆனால் இடுப்பில் உள்ள லுங்கியின் கட்டை இறுக்கத் தெரியாவிட்டால் குறைந்தது உள்ளே ஜட்டியாவது அணிந்து தூங்குவதன் மூலம், தூங்கி எழும்பும் போது அம்மணமாக இருக்கும் சந்தர்ப்பத்தை தவிர்க்கலாம்.
ஆண்கள் லுங்கி கட்டும் போது வெறுமனே இடுப்பில் சொருகாமல், கட்டுப் போட்டு கட்டலாம். லுங்கி கட்டுவதில் பல்வேறு முறைகள் உள்ளன.
வேட்டி போன்ற லுங்கி அணிவதை விட இரு முனைகளும் மூட்டப்பட்ட லுங்கி(சாரம்) அணியலாம். அது நீங்கள் தூங்கும் போது உங்களை அறியாமல் லுங்கி விலகுவதை தவிர்க்க உதவும்.
அன்றாட வாழ்க்கையில் லுங்கி, சாரம், வேட்டியை அதிகம் பயன்படுத்தும் ஆண்கள் இடுப்பில் அருணாக்கொடியை அணிந்து கொள்வதன் மூலம், அதனை லுங்கி/சாரம், வேட்டியின் கட்டின் மீது விட்டு அவற்றை கீழ் நோக்கி உருட்டி மடித்து அவற்றின் கட்டினை இலகுவாக அவிழாதவாறு இறுக்கலாம்.

















Comments
Post a Comment